செய்திகள்
கோப்பு படம்

கண்ணூர் அருகே மனைவியை கொன்று நாடகமாடிய முதியவர் போலீசுக்கு பயந்து தற்கொலை

Published On 2019-11-18 12:29 GMT   |   Update On 2019-11-18 12:29 GMT
கண்ணூர் அருகே மனைவியை கழுத்தை இறுக்கி கொன்று நாடகமாடிய முதியவர் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார்.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலைச்சேரி பானூரை சேர்ந்தவர் குட்டி கிருஷ்ணன் (வயது 68). இவரது மனைவி நிர்மலா (60). நேற்று வீட்டில் இருந்த குட்டி கிருஷ்ணன் வெளியே வந்து தனது மனைவி திடீரென மயங்கி விட்டார் என்று கூறினார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தலைச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நிர்மலா இறந்தார். இது குறித்து டி.எஸ்.பி. வேணுகோபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு நிர்மலா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அவரது கணவரிடம் விசாரணை நடத்த முயன்றனர். அப்போது குட்டி கிருஷ்ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலையும் போலீசார் மீட்டு தலைச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, மனைவியை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்று விட்டு நாடகமாடிய குட்டி கிருஷ்ணன் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வருவதாக கூறினர்.
Tags:    

Similar News