செய்திகள்
யோகி ஆதித்யநாத்

அயோத்தி தீர்ப்பு எதிரொலி - உ.பி.யில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Published On 2019-11-08 16:44 GMT   |   Update On 2019-11-08 16:44 GMT
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், உத்தர பிரதேசத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
லக்னோ:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட் இன்று அறிவித்துள்ளது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெருத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தீர்ப்பை முன்னிட்டு மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக உத்தர பிரதேச அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், உத்தர பிரதேசத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உபியில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லுரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்களுக்கு 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News