செய்திகள்
நிதிஷ் குமார்

டெல்லிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் - நிதிஷ் குமார் வலியுறுத்தல்

Published On 2019-10-23 13:34 GMT   |   Update On 2019-10-23 13:34 GMT
டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் ஐக்கிய ஜனதா தளத்தின் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவரும், பீகார் முதல் மந்திரியுமான நிதிஷ் குமார் பேசினார். அப்போது அவர் பேசுகையில், டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

மத்தியில் ஆட்சி அமைத்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ் குமார், டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, மாநில அந்தஸ்து அளிக்கக் கோரி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருவது நினைவிருக்கலாம்.
Tags:    

Similar News