search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநில அந்தஸ்து"

    • புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை.
    • இந்திய கூட்டணி வெற்றி பெற்ற பிறகு நாங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.

    புதுச்சேரியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று பிரசாரம் மேற்கொண்டார். புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு கட்சியின் தேசிய தலைவர் ஆதரவு திரட்டினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

    நாங்கள் எதைச் சொன்னாலும், வாக்குறுதி அளித்தாலும் அதைச் செய்வோம். ஆனால் பிரதமர் மோடி செய்ய மாட்டார். காங்கிரஸ், ராகுல் காந்தி, சோனியா காந்தியால் மட்டுமே செய்ய முடியும்.

    புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை.

    நேற்று வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை புதுச்சேரி மக்களின் அபிலாஷைகளை அப்பட்டமாக புறக்கணிப்பதாக உள்ளது.

    காங்கிரஸ் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. 2024 தேர்தலில் இந்திய கூட்டணி வெற்றி பெற்ற பிறகு நாங்கள் வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
    • முதற்கட்ட பேராட்டமே நிறைவு, தனது போராட்டம் முடிவுக்கு வரவில்லை.

    லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவரது போராட்டத்திற்கு ஆதரவாக ஏராளமான மக்கள் திரண்டனர்.

    இந்நிலையில் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரத போராட்டத்தை 21-வது நாளான இன்று முடித்துக்கொண்டார்.

    பின்னர் பேசிய அவர், "முதற்கட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் முடிவடைவதாகவும், ஆனால் தனது போராட்டம் முடிவுக்கு வரவில்லை என்றும் தெரிவித்தார். இந்த உண்ணாவிரதத்தின் முடிவு, போராட்டத்தின் புதிய கட்டத்தின் தொடக்கம்" என்றும் வாங்சுக் குறிப்பிட்டார்.

    இதற்கிடையே, லடாக் யூனியன் பிரதேச மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் முன்வைத்தார்.

    பின்னர், வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் தங்கள் வாக்குரிமையை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாணவர்களுக்கு லேப்டாப்புக்கு பதிலாக பணம் வழங்குவது குறித்து அடுத்த ஆண்டு முடிவு செய்யப்படும்.
    • மத்திய அரசிடம் ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்குவது குறித்து வலியுறுத்தி வருகிறோம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுச்சேரியில்,40,000 குடும்பத்தலைவிகளுக்கு, ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் பரிசோதனை முயற்சியாக, 1 எம்.எல்.டி. குடிநீர் வழங்கப்பட உள்ளது.

    அடுத்து, 50 எம்.எல்.டி குடிநீர் வழங்க திட்டமிடப்படப்பட்டுள்ளது.

    பிரீபெய்டு மீட்டர் திட்டத்தை செயல் வடிவத்திற்கு கொண்டு வர ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    பிரீபெய்டு மின் மீட்டர் திட்டத்தின் சாதகம், பாதகம் குறித்து அறிந்து திட்டம் செயல்படுத்தப்படும்.

    கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து மத்திய அரசு அறிவுறுத்தல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.

    மாணவர்களுக்கு லேப்டாப்புக்கு பதிலாக பணம் வழங்குவது குறித்து அடுத்த ஆண்டு முடிவு செய்யப்படும். அதுபோல் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தரமில்லாத சைக்கிள்களை மாற்றி தர ஒப்பந்த நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.

    அரசு அதிகாரிகள் மக்களுக்கு தேவையான திட்டங்களை வேகமாக செயல்படுத்தினால் தான் வளர்ச்சி இருக்க முடியும். இதை வலியுறுத்த வேண்டியது அரசின் கமை என்பதால், தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

    அதனால் அரசு. அதிகாரிகள் அதிகமாக கேள்விகளை கேட்டு கோப்புகளை திருப்பி அனுப்பக்கூடாது.

    இது போன்ற பிரச்சினைகளுக்கு மாநில அந்தஸ்து தான் தீர்வாக இருக்கும். இதுகுறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து

    வலியுறுத்தி வருகிறேன். நிர்வாகம் வேகமாக செயல்பட மாநில அந்தஸ்து தேவை.

    மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்போம். தேசிய ஜனநாயகக்கூட் டணி அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தி வருகிறது.

    மத்திய அரசிடம் ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்குவது குறித்து வலியுறுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து நிருபர்கள் பா.ஜனதா கூட்டணியில் உங்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. எனவே அந்த கூட்டணியில் இருந்து வெளியே வந்தால் தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜி நிலை தான் உங்களுக்கு ஏற்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. கூறியது குறித்து முதலமைச்சர் ரங்கசாமியிடம் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு முதலமைச்சர் ரங்கசாமி அதுபோன்று எந்த நிலையும் எப்போதும் ஏற்படாது என்றார்.

    மேலும் அவரிடம் காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால் உங்களை முதலமைச்சராக ஏற்க தயார் என்று எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனரே என்று கேட்டதற்கு முதலமைச்சர் ரங்கசாமி சிரித்து கொண்டே நன்றி என பதில் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5 ஆண்டும் மாநில அந்தஸ்து பெறுவோம் என கூறியே முதல்- அமைச்சர் தனது ஆட்சியை நடத்துவார்.
    • மாநில அந்தஸ்து என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி ரங்கசாமி ஆட்சி நடத்துகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவோம் என என்.ஆர்.காங்கிரஸ் மக்களிடம் தெரிவித்து தேர்தலை சந்தித்தது தேர்தல் நேரத்தில் புதுவைக்கு வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவோம் என கூறியிருந்தார்.

    ஆனால் இவை இரண்டுமே நடைபெறவில்லை. 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டுவரை முதல்-அமைச்சர்கள் மாநாட்டிலும், பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திக்கும்போதும், தொடர்ந்து புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என நான் வலியுறுத்தினேன்.

    சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பினோம். மத்திய உள்துறை அமைச்சகம் இந்த கோப்பை கிடப்பில் போட்டது.

    மாநில அந்தஸ்து கொடுத்தால், காங்கிரஸ் அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்பதற்காகவும், களங்கம் விளைவிக்கும் எண்ணத்தோடும் தீர்மானத்தை ஏற்கவில்லை.

    இப்போது மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கமான ஆட்சிதானே நடக்கிறது. இவர்களால் ஏன் மாநில அந்தஸ்து பெற முடியவில்லை. இதிலிருந்து தெள்ளத்தெளிவாக பிரதமர் மோடி, புதுவை மாநில மக்களை பழிவாங்குகிறார் என தெரிகிறது. பா.ஜனதா புதுவை மக்களை உதாசீனப்படுத்துகிறது.

    மாநில அந்தஸ்து வழங்க முடியாது என மத்திய அரசு கைவிரித்துள்ள நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வர தயாரா? பா.ஜனதாவின் அடிமை ஆட்சியை முதல்-அமைச்சர் ரங்கசாமி நடத்துகிறார்.

    5 ஆண்டும் மாநில அந்தஸ்து பெறுவோம் என கூறியே முதல்- அமைச்சர் தனது ஆட்சியை நடத்துவார். அவரால் மாநில அந்தஸ்து பெற முடியாது. மாநில அந்தஸ்து என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி ரங்கசாமி ஆட்சி நடத்துகிறார்.

    இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து மாநில அந்தஸ்து கோரி வருகிறார்.
    • பிரதமர், உள்துறை மந்திரி, மத்திய மந்திரிகளை அனைத்து எம்.எல்.ஏ.க்களோடு முதல்-அமைச்சர் தலைமையில் சந்தித்து மாநில அந்தஸ்தை வலியுறுத்துவோம்.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது.

    புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி ஏற்கனவே 13 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை மாநில அந்தஸ்து கிடைக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் மாநில அந்தஸ்து பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

    புதுவையில் பா.ஜனதா-என்ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மத்திய ஆட்சியாளர்களோடு இணக்கமான ஆட்சி புதுவையில் நடந்து வருவதால் இந்த காலக்கட்டத்தில் மாநில அந்தஸ்து கிடைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலிலும் மாநில அந்தஸ்து பெறுவோம் என அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்குறுதி அளித்தன.

    கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு 14-வது முறையாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த தீர்மானம் கடந்த ஜூலை மாதம் கவர்னர் தமிழிசை ஒப்புதலோடு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் புதுவை அரசின் தீர்மானத்திற்கு மத்திய அரசு கடிதம் மூலம் பதிலளித்துள்ளது.

    இந்த கடிதத்தில் தற்போதைய நிலையே புதுவையில் தொடரும் என குறிப்பிட்டுள்ளது. இதனால் யூனியன் பிரதேசமாகவே புதுவை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது புதுவை அரசியல் கட்சிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சட்டசபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    மாநில அந்தஸ்து வழங்க முடியாது என மத்திய அரசு தெரிவிக்கவில்லை. தற்போதைய நிலையே தொடரும் என தெரிவித்துள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அனுப்பப்பட்ட தீர்மானங்களை பற்றி மத்திய அரசு தெரிவிக்கவில்லை. 2022-23-ம் ஆண்டில் புதுவை சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மாநில அந்தஸ்தை வலியுறுத்திய அரசு தீர்மானத்தின் மீது மத்திய அரசு பதிலளித்துள்ளது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து மாநில அந்தஸ்து கோரி வருகிறார். மீண்டும் சட்டசபையில் மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் கொண்டு வரப்படும். பிரதமர், உள்துறை மந்திரி, மத்திய மந்திரிகளை அனைத்து எம்.எல்.ஏ.க்களோடு முதல்-அமைச்சர் தலைமையில் சந்தித்து மாநில அந்தஸ்தை வலியுறுத்துவோம்.

    நிதி கமிஷனில் புதுவையை சேர்க்க வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது. நிதி கமிஷனில் முதலில் புதுவை சேர்க்கப்படும். பின்னர் மாநில அந்தஸ்து கோரிக்கை வலுப்பெறும். சிலவற்றில் மட்டும்தான் மத்திய அரசு புதுவையை யூனியன் பிரதேசமாக கருதுகிறது. மற்ற அனைத்து விஷயங்களிலும் மாநிலமாகவே கருதுகிறது. அதன்படி புதுவையிலேயே உள்ள அதிகாரத்தை பயன்படுத்திக்கொள்ள மத்திய உள்துறை தெரிவிக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • எல்லா நாடுகளும் இந்தியாவின் வளர்ச்சியை உற்று நோக்குகின்றன.
    • யூனியன் பிரதேசங்களில் கல்வி, மருத்துவத்தில் புதுவை முதலிடம் பிடித்துள்ளது.

    புதுச்சேரி:

    சுதந்திர தினத்தையொட்டி கம்பன் கலையரங்கில் தியாகிகள் கவுரவிப்பு நிகழ்ச்சி நடந்தது. தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்து, இனிப்பு வழங்கி முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்கள், வீரர்கள் நம் நாடு வளர்ச்சியடைய வேண்டும் என எண்ணினர். அவர்கள் எண்ணம்போல நம் நாடு இப்போது பெரிய வளர்ச்சியை நோக்கி செல்கிறது.

    உலகின் தலைசிறந்த நாடாக இந்தியா விளங்கி வருகிறது. எல்லா நாடுகளும் இந்தியாவின் வளர்ச்சியை உற்று நோக்குகின்றன. நாட்டின் வளர்ச்சியில் பங்களிப்பு செய்யும் வகையில் புதுவையும் வளர்ச்சி பெற்று வருகிறது.

    யூனியன் பிரதேசங்களில் கல்வி, மருத்துவத்தில் புதுவை முதலிடம் பிடித்துள்ளது. உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறோம். பல ஆண்டாக மாநில அந்தஸ்து கேட்டு வருகிறோம். புதுவைக்கு மாநில அந்தஸ்து என்று எப்போதும் மத்திய அரசை அணுகி கோரிக்கை வைத்து வருகிறோம்.

    மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால்தான் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளோம்.

    நேரடியாகவும் சந்தித்து மத்திய அரசை கேட்டுள்ளோம். எம்.எல்.ஏ.க்கள், தலைவர்களை டெல்லி அழைத்துச் சென்று பிரதமரிடம் மாநில அந்தஸ்தை கேட்டு வலியுறுத்துவோம். நிச்சயமாக மாநில அந்தஸ்தை பெறுவோம். புதுவையில் ஆயிரத்து 348 தியாகிகள் உள்ளனர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் பென்ஷன் வழங்கப்படுகிறது.

    இந்த தொகையை உயர்த்த வேண்டும் என தியாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே தியாகிகளுக்கு வழங்கப்படும் பென்ஷன் தொகை ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அனிபால்கென்னடி எம்.எல்.ஏ, கலெக்டர் வல்லவன், அரசு செயலர் பத்மாஜெய்ஸ்வால், செய்தி விளம்பரத்துறை இயக்குனர் தமிழ்செல்வன், துறை அதிகாரிகள், விடுதலை போராட்ட தியாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • புதுவை அரியாங்குப்பம், தேங்காய்திட்டு பகுதியிலிருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்றனர்.
    • மாநில அந்தஸ்து வேண்டும் என்றால் அரசு ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் டெல்லியை அணுக வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சமீபமாக பலமாக எழுந்துள்ளது.

    அரசியல் கட்சிகளிடையே இதுதொடர்பாக நாள்தோறும் விவாதமும் நடந்து வருகிறது. சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் கிடைக்கும் வகையில், மாநில அந்தஸ்து வேண்டும் என்ற குரலை உயர்த்தியுள்ளனர்.

    இந்நிலையில் புதுவை அரியாங்குப்பம், தேங்காய்திட்டு பகுதியிலிருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்றனர். அந்த பக்தர்கள் கோவிலின் 18-ம் படிக்கு கீழே புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு பேனரை பிடித்துள்ளனர்.

    இந்த படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த பேனரில், புதுவை மக்கள் சுயமரியாதையை காக்க மாநில அந்தஸ்து வேண்டும். இது புதுவை மக்களின் குரல் என குறிப்பிட்டுள்ளனர்.

    மாநில அந்தஸ்து வேண்டும் என்றால் அரசு ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் டெல்லியை அணுக வேண்டும். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பாராளுமன்றம், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும். அதை விடுத்து கோவில் முன்பு பேனர் பிடிப்பதால் மாநில அந்தஸ்து கிடைத்துவிடுமா? என்ற விவாதமும் எழுந்துள்ளது.

    • ரங்கசாமிக்கு அதிகாரம் வேண்டும் என்பதால் மாநில அந்தஸ்து கேட்பதாக சிலர் கேலி செய்கின்றனர்.
    • எதிர்காலத்தில் அரசியலுக்கு வருபவர்களுக்கு சிரமம் இருக்கக்கூடாது என்பதால் மாநில அந்தஸ்து கேட்கிறேன்.

    புதுச்சேரி:

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தப்படுகிறது. மத்திய ஆட்சியாளர்களின் தயவில்தான் புதுவையின் ஒவ்வொரு நகர்வும் இருப்பதால் மாநில அந்தஸ்து அவசியம் என பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், புதுச்சேரியில் அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுவதாக முதல்வர் ரங்கசாமி வேதனையுடன் கூறி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை செயல்படுத்தக்கூடாது என அதிகாரிகள் உள்ளனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் நிர்வாகம் செய்வதில் சிரமம் உள்ளது என ஆள்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

    ரங்கசாமிக்கு அதிகாரம் வேண்டும் என்பதால் மாநில அந்தஸ்து கேட்பதாக சிலர் கேலி செய்கின்றனர். புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருபவர்களுக்கு சிரமம் இருக்கக்கூடாது என்பதால் மாநில அந்தஸ்து கேட்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பட்ஜெட் தாக்கல் தொடர்பான கோரிக்கைகளை நிராகரித்ததால் அதிருப்தில் உள்ள சித்தராமையாவை சமாதானப்படுத்துவதற்காக மந்திரி பதவிக்கு இணையான பதவி வழங்க முடிவு செய்துள்ளனர். #Siddaramaiah
    பெங்களூர்:

    கர்நாடகத்தில் தனித்து ஆட்சியில் இருந்த காங்கிரஸ், சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது. இதனால் குமாரசாமியின் ஜே.டி.எஸ். கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. என்றாலும் ஆட்சியின் தலைமை பொறுப்பு ஜே.டி.எஸ். கட்சியிடம் உள்ளது.

    முதல்-மந்திரி பதவி இழந்த சித்தராமையா தற்போது கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக உள்ளார். காங்கிரஸ் மாநில தலைவர் ஜி.பரமேஸ்வரா துணை முதல்-மந்திரி பதவி வகிக்கிறார். ஒருங்கிணைப்பு குழு தலைவர் என்ற அதிகாரம் இல்லாத பதவியில் இருப்பதால் சித்தராமையா அதிருப்தியில் உள்ளார்.

    இந்த நிலையில் சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடாது என்று சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்தார். அவரது கோரிக்கையை ஜே.டி.எஸ். கட்சி மேலிடம் நிராகரித்து விட்டது. இதனால் சித்தராமையா மேலும் அதிருப்தியில் உள்ளார்.

    இதற்கிடையே சித்தராமையாவுக்கு மந்திரி பதவிக்கு இணையான அந்தஸ்து வழங்க வேண்டும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா கூறினார். ஆனால் அவருக்கு மந்திரி பதவி அந்தஸ்து வழங்க மாநில அரசு தயக்கம் காட்டி வருவதாக குற்றம் சாட்டினார்.

    கூட்டணி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சித்தராமையாவுக்கு விதான்சவுதா தலைமைச் செயலகத்தில் அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது சோனியாகாந்தி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். அவருக்கு மந்திரி அந்தஸ்து வழங்கப்பட்டது. எனவே சித்தராமையாவுக்கு மந்திரி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று பரமேஸ்வரா கூறினார்.

    பட்ஜெட் தாக்கல் செய்யும் விவகாரத்தில் சித்தராமையாவின் கோரிக்கையை காங்கிரஸ் மேலிடம் நிராகரித்து விட்டது. மேலும் துணை முதல்-மந்திரி பரமேஸ்வராவும் பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக குமாரசாமிக்கு ஆதரவாக செயல்படுவதாக சித்தராமையா கருதுகிறார்.

    இதனால் கூட்டணியில் சித்தராமையாவால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க அவருக்கு மந்திரி அந்தஸ்து வழங்கலாம் என்ற முடிவுக்கு குமாரசாமி வந்து இருக்கிறார். இன்னும் ஒருசில நாட்களில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.

    தற்போது விதான் சவுதா அலுவலகத்துக்கு சித்தராமையா வருவது கிடையாது. மந்திரி அந்தஸ்து அறிவிப்பு வெளியானதும் அவர் அலுவலகம் செல்வார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். #Siddaramaiah
    ×