செய்திகள்
கமல்ஹாசன்

இந்து தீவிரவாதி பேச்சு- கமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Published On 2019-10-15 10:17 GMT   |   Update On 2019-10-15 10:17 GMT
இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசிய கமலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நவம்பர் 22-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த மே மாதம் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்த போது ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் பெயர் நாதுராம் கோட்சே!’ என பேசினார்.

கமலின் இந்த பேச்சுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அவர் மீது டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் இந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணுகுப்தா கிரிமினல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கை அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதிக்கு நீதிபதி சுமித் ஆனந்த் ஒத்தி வைத்தார். அன்றைய தினமே புகார்தாரரின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார்.
Tags:    

Similar News