செய்திகள்
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிய சோனியா காந்தி.

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சோனியா தேசிய கொடி ஏற்றினார்

Published On 2019-08-15 07:03 GMT   |   Update On 2019-08-15 07:38 GMT
73-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சோனியா காந்தி தேசிய கொடியை ஏற்றினார்.
புதுடெல்லி:

73-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நிகழ்ச்சியில் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றினார். அப்போது காங்கிரஸ் சேவாதள தொண்டர்கள் சல்யூட் அடித்து தேசிய கொடிக்கு மரியாதை செய்தனர்.


நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர்கள் சல்மான்குர்ஷித், அகமது படேல், குலாம்நபி ஆசாத், கபில்சிபல், மோதிலால் வோரா, ஏ.கே.அந்தோணி, பூபீந்தர்சிங் ஹூடா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சுதந்திரதின விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளை வழங்கினார்கள்.
Tags:    

Similar News