செய்திகள்
வெள்ளத்தில் சிக்கிய அசாம்

அசாமில் கனமழை - வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 88 ஆக அதிகரிப்பு

Published On 2019-08-03 03:55 GMT   |   Update On 2019-08-03 03:55 GMT
அசாமில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
கவுகாத்தி:

அசாம் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்யும் மழையால் பிரம்மப்புத்திரா உள்பட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அபாயகட்டத்தை எட்டியுள்ளது. மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்கள் முற்றிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.



தேமாஜி, டாரங், பர்பேடா, பிஸ்வநாத், சோனிப்பூர், சிராங், காம்ரூப் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஒரு லட்சத்து 65 ஆயிரம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். பல பகுதிகளில் வாகன போக்குவரத்து மற்றும் ரெயில் சேவைகள் ஸ்தம்பித்துள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது என தேசிய பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News