செய்திகள்
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை- ராணுவ வீரர் பலி
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் பலியானார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் பன்துஷன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே பாதுகாப்பு படை வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பொழுது மறைந்திருந்து பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இதனால் ராணுவத்தினரும் எதிர் தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். இன்னொரு ராணுவ வீரர் படுகாயம் அடைந்தார். அங்கு தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.