செய்திகள்
மின்னல்

உத்திரபிரதேசத்தில் மின்னல் தாக்கி 7 பேர் பலி

Published On 2019-07-22 12:07 GMT   |   Update On 2019-07-22 12:07 GMT
உத்திரபிரதேச மாநிலத்தில் இன்று பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
லக்னோ:

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

இந்நிலையில், மாநிலத்தில் இன்று பெய்த  இடியுடன் கூடிய கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்னல் சீறிப்பாய்ந்தது. அப்போது மின்னல் தாக்கி ஜலாவுன் மாவட்டத்தில் 4 நபர்களும், ஹமீர்பூர் பகுதியில் 3 நபர்களும் , பண்டா மற்றும் சித்ரகோட் மாவட்டங்களில் தலா ஒரு நபரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். 

மின்னல் தாக்கி படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.     
Tags:    

Similar News