செய்திகள்

மேலும் ஒரு டிக் டாக் விபரீதம் - துப்பாக்கி வெடித்து 17 வயது சிறுவன் பலி

Published On 2019-06-14 10:02 GMT   |   Update On 2019-06-14 10:02 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் டிக் டாக் செயலிக்காக நாட்டு துப்பாக்கியுடன் ‘போஸ்’ கொடுத்த 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை:

டிக் டாக் மோகத்தால் விசித்திரமான சாகசங்களை நிகழ்த்த முயன்று சிலர் தற்செயலாக உயிரைவிட நேரும் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அவ்வகையில், மகாராஷ்டிரா மாநிலம், ஷிர்டி மாவட்டத்தில் பிரட்டீக் வடேகர் என்ற  17 வயது சிறுவன் நாட்டு துப்பாக்கியுடன் டிக் டாக் செயலிக்காக நேற்று ‘போஸ்’ கொடுக்க முயன்றுள்ளான்.



அப்போது, எதிர்பாராத வகையில் துப்பாக்கியின் தோட்டா அவனது உடலுக்குள் பாய்ந்தது. இதில் அந்த சிறுவன் துடிதுடித்து உயிரிழந்தான்.

உறவினர் மரணச் சடங்கில் பங்கேற்பதற்காக ஷிர்டிக்கு வந்தபோது தங்கியிருந்த ஹோட்டலில் நடந்த இந்த விபரீத சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஷிர்டி போலீசார், மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News