செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - பெண் பரிதாப பலி

Published On 2019-06-05 05:40 GMT   |   Update On 2019-06-05 05:40 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்மணி உயிரிழந்தார்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சிங்கூ நர்பல் பகுதியில் பயங்கரவாதிகள் இன்று காலை திடீரென நுழைந்தனர்.

அவர்கள் அங்கு வந்து கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர். அதன்பின் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

படுகாயம் அடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி பெண்மணி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  
Tags:    

Similar News