செய்திகள்

எந்த மொழியையும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

Published On 2019-06-02 12:43 GMT   |   Update On 2019-06-02 12:43 GMT
எந்த மொழியையும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

மத்திய அரசுக்கு கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்த புதிய கல்விக் கொள்கையில், அனைத்து மாநிலங்களும் தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இது இணையத்தில் வெளியிடப்பட்டு பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்படுகின்றன.

இந்தி பேசாத மாநிலங்களில் இந்த கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. 



இந்நிலையில், எந்த மொழியையும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், மத்திய அரசு மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே புதிய கல்வி குழுவின் வரைவை மத்திய அரசு முன்னெடுத்து செல்லும். அரசு அனைத்து இந்திய மொழிகளை வளர்க்கவும், ஊக்குவிக்கவும் எல்லா முயற்சியையும் எடுக்கும். எந்த மொழியையும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News