செய்திகள்

தொகுதி பங்கீடு குறித்து காங்கிரசுடன் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: தேவேகவுடா

Published On 2019-01-28 02:09 GMT   |   Update On 2019-01-28 02:09 GMT
பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரசுடன் பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை என்று தேவே கவுடா கூறினார். #DeveGowda
பெங்களூரு :

ஜனதா தளம்(எஸ்) தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இதுவரை தொடங்கவில்லை. இந்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்.

பெங்களூரு நகருக்குள் வரும் பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரு செயல் தலைவர் நியமனம் செய்யப்படுவார். தேர்தல் பொறுப்பாளராக குபேந்திரரெட்டி எம்.பி. நியமனம் செய்யப்படுவார். அவர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கலந்துரையாடுவார். தேர்தல் பிரசாரத்தை அவர் ஒருங்கிணைப்பார்.

காங்கிரசுடன் பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகே, எத்தனை தொகுதிகள் எங்களுக்கு கிடைக்கும் என்பது தெரியவரும். பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஹாசன் தொகுதியில் எனது பேரன் பிரஜ்வல்லை நிறுத்து முடிவு செய்துள்ளேன் என்பதை நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன். ஆயினும் இதுபற்றி எங்கள் கட்சியின் உயர்நிலை குழு கூட்டத்தில் தான் இறுதி முடிவு எடுக்கப்படும்.

ஏழை மக்களின் நலனை காக்க குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு செயலாற்றி வருகிறது.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் டி.ஏ.ஷரவணா எம்.எல்.சி., குபேந்திரரெட்டி எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.#DeveGowda
Tags:    

Similar News