என் மலர்

    நீங்கள் தேடியது "Parliamentary elections"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நமக்கு கிடைத்த மிகப்பெரிய இமாலய வெற்றி.
    • வெற்றியை தடுப்பதற்கு பல குறுக்கு வழிகளை பலர் செய்தனர். அவையெல்லாம் முறியடித்து மிகப்பெரிய சாதனையை முதல்வர் செய்துள்ளார்.

    சென்னை:

    சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 40 நாட்கள் 70 நிகழ்ச்சிகளை மாவட்ட செயலாளர் அமைச்சர் பி. கே. சேகர் பாபு ஏற்பாடு செய்துள்ளார். மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா என்ற தலைப்பில் பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்களும் நல உதவி திட்டங்கள் வழங்கும் விழாவும் நடைபெற்று வருகிறது. அயனாவரத்தில் சென்னை கிழக்கு மாவட்ட தி. மு.க. மகளிர் அணி சார்பில் சுதா தீனதயாளன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு அமைச்சர் பி. கே. சேகர் பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தி.மு.க. துணை பொது செயலாளர் கனிமொழி எம். பி. கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது :

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நமக்கு கிடைத்த மிகப்பெரிய இமாலய வெற்றி. இந்த வெற்றியை தடுப்பதற்கு பல குறுக்கு வழிகளை பலர் செய்தனர். அவையெல்லாம் முறியடித்து மிகப்பெரிய சாதனையை முதல்வர் செய்துள்ளார்.

    ஜாதி, மதம், இனம் அனைத்தும் ஒன்றுபட்டு சுதந்திரம் பெற்ற நம் இந்தியா, இன்று கருத்துரிமை, பேச்சுரிமை, ஜனநாயகம் பறிக்கப்பட்டு மக்களின் வெறுப்பு அரசியலாக ஒன்றிய அரசு ஆட்சி செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சியை மீட்டெடுக்க வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பேராசிரியை சாரதா நம்பி ஆரூரான், வழக்கறிஞர் மதிவதனி, ஏ. வேதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2024ல் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது.
    • வாக்காளர்கள் விரும்பிய வேட்பாளருக்கு ஓட்டளித்ததை, விவி பேட் எந்திரத்தில் பார்த்து கொள்ளமுடியும்.

    திருப்பூர் :

    திருப்பூரில் பாராளுமன்ற தேர்தலுக்காக புதிய விவி பேட் எந்திரங்களை கொள்முதல் செய்து மாநிலம் வாரியாக தேர்தல் கமிஷன் அனுப்பி வருகிறது.வரும் 2024ல் பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்துடன் விவி. பேட் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

    வாக்காளர்கள், தாங்கள் விரும்பிய வேட்பாளருக்கு ஓட்டளித்ததை, விவி பேட் எந்திரத்தில் பார்த்து உறுதி செய்து கொள்ளமுடியும். வாக்காளர்களுக்கு நம்பகத்தன்மையை அளிக்கும் இந்த எந்திரங்கள் தேர்தலில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

    இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது :- ஒவ்வொரு தேர்தலிலும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை தயார் செய்வது முக்கியமான பணியாக உள்ளது. அதன்படி வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு எந்திரங்களை தயார் செய்யும் பணியை தேர்தல் கமிஷன் தொடங்கி விட்டது என்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாராளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது என எம்.எஸ்.ஷா தெரிவித்துள்ளார்.
    • தமிழக மக்களை வழிநடத்தி வரும் அண்ணாமலையின் செயல்பாடுகள் தமிழக மக்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.

    மதுரை

    பாரதீய ஜனதா கட்சியின் பொருளாதர பிரிவு மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தஞ்சா வூரில் நடந்தது. இதில் மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-

    பா.ஜ.க. மாநில தலைவராக அண்ணாமலை தலைமையேற்ற பின் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் பா.ஜ.க.வின் வளர்ச்சி அபாரமாக உள்ளது. சாதாரண மக்களும் பா.ஜ.க.வின் கொள்கை களை புரிந்து கொள்ளும் வகையில் அண்ணாமலை பேசி வருகிறார். அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் பாமர மக்களிடம் விழிப்பு ணர்வை ஏற்படுத்தி வருகிறது. அண்ணாமலை மிக எளிய தலைவராக இருந்து மக்கள் பயன்பெறும் வகையில் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்.

    தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 590 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அதில் ஒன்றி ரண்டு வாக்குறுதிகளை தவிர மற்ற வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்பி வருகிறது.

    தமிழகம் முழுவதும் விலைவாசி உயர்வு குறித்தும், மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் அண்ணாமலை விளக்கி பேசி வருகிறார். இந்தியாவில் 3-வது முறையாகவும் மோடி பிரதமராவது உறுதியாகி உள்ளது.

    பல்வேறு மாநிலங்களில் பல்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் செலவுகள் அதிகம் ஏற்பட்டு அரசு பணிகள் செய்வதில் தொய்வு ஏற்படு கிறது. எனவே பாராளு மன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் என்று அண்ணாமலை பேசி வருகிறார். அதனை மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. அண்ணாமலை தெரிவிக்கும் கருத்துக்கள் பாரம மக்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

    அவ்வாறு தேர்தல் நடக்கும் பட்சத்தில் இந்தியா வல்லரசாவது உறுதி. தமிழக மக்களை வழிநடத்தி வரும் அண்ணாமலையின் செயல்பாடுகள் தமிழக மக்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் ஜீ, பொருளாதார பிரிவு துணைத்தலைவர்கள் டாக்டர்கள் தேவ்ஜில், நாகராஜன் மற்றும் வெங்கடேஷ், ராஜசேகர் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • கிராமப்புறங்களில் கட்சியை வலுப்படுத்த செய்ய வேண்டிய பணிகள் பற்றி கமல்ஹாசன், நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் பாராளுமன்ற தேர்தலில் முதல் வெற்றியை பெற்று விடவேண்டும் என்கிற முனைப்பில் வியூகம் அமைத்து செயலாற்றி வருகிறார்.

    இதற்காக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் தொடர்ச்சியாக கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கடந்த மாதம் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்த அவர் கடந்த 4-ந்தேதி செயற்குழு உறுப்பினர்களுடன் ஆலோசித்தார்.

    இதன் தொடர்ச்சியாக சென்னை அண்ணாநகரில் இன்று மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    அங்குள்ள தனியார் ஓட்டலில் நடந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் 117 பேர் பங்கேற்றனர். செயற் குழுவை சேர்ந்த மாநில நிர்வாகிகள் 25 பேரும், நிர்வாக குழுவை சேர்ந்த 5 பேரும் கலந்து கொண்டனர்.

    துணை தலைவர்கள் மவுரியா, தங்கவேலு, செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், சிவ இளங்கோ, கவிஞர் சினேகன், முரளி அப்பாஸ், மூகாம்பிகை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    கிராமப்புறங்களில் கட்சியை வலுப்படுத்த செய்ய வேண்டிய பணிகள் பற்றி கமல்ஹாசன், நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. போடாத ரோடுகளுக்கு கூட போட்டதாக கணக்கு காட்டி கொள்ளை அடிக்கின்றனர்.
    • தி.மு.க.விற்கு கூட்டணி பலம் இருந்தாலும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் நிச்சயமாக பாடம் புகட்டி தோல்வியை தருவார்கள்.

    மதுரை:

    மதுரையில் கட்சி பிரமுகரின் திருமண விழாவில் பங்கேற்க அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று காலை மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. போடாத ரோடுகளுக்கு கூட போட்டதாக கணக்கு காட்டி கொள்ளை அடிக்கின்றனர். தி.மு.க. என்றாலே ஊழல் என்பதை தான் மேற்கண்ட நிகழ்வுகள் காட்டுகின்றன. ஒரு கட்சி என்பது அனைத்து மதத்துக்கும் நடுநிலையாக இருக்க வேண்டும். ஆனால் மதசார்பற்ற கட்சி என்று தி.மு.க. கூறிக்கொண்டு, இந்து மதத்திற்கு எதிராக பேசி வருகிறது.

    தேர்தலின்போது அளித்த எந்த வாக்குறுதிகளையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. எனவே பொதுமக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். தி.மு.க.விற்கு கூட்டணி பலம் இருந்தாலும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் நிச்சயமாக பாடம் புகட்டி தோல்வியை தருவார்கள். 2023-ம் ஆண்டில் அ.ம.மு.க.வின் தேர்தல் வியூகம் வெளிப்படும். ஜெயலலிதா மறைவிற்கு பின் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அதிகாரம், பணத்தை நம்பி மட்டும் தான், அவர்களுடன் சிலர் இருந்தனர்.

    அ.தி.மு.க. செயல்படாமல் இருப்பதற்கு மேற்கண்ட 2 பேர் மட்டும்தான் காரணம். தமிழகத்தில் அ.ம.மு.க. எதற்காக தொடங்கப்பட்டது? என்பதை மேற்கண்ட 2 பேரும் புரிய வைத்து உள்ளனர். ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசு சரியான முறையை கையாண்டு பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். சசிகலா ஏன் மவுனமாக உள்ளார்? என்பது பற்றி, நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் பல தடைகளை கடந்து திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார்”, என வைகோ கூறினார்.
    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளது. அதன்படி சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தொல்.திருமாவளவனும், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் ரவிக்குமாரும் வெற்றி பெற்றுள்ளனர்.

    இந்தநிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பொதுச்செயலாளர் ரவிக்குமார் நேற்று சந்தித்தனர். அப்போது பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்காக இருவருக்குமே, வைகோ வாழ்த்து தெரிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    எத்தனையோ தடைகளை உருவாக்கி பார்த்தும், கோடி கோடியாக பணத்தை கொட்டி பார்த்தும் தொல்.திருமாவளவனின் வெற்றியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பல்வேறு தாக்குதல்கள் அவர் மீது ஏவப்பட்டன. தடைகள் அனைத்தையும் தாண்டி மக்களின் நல் ஆதரவை பெற்று, சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று உள்ளார்.

    ஜனநாயக சுடர் தமிழகத்தில் அணையாமல், இந்தியாவுக்கே வழிகாட்டும் சுடராக பிரகாசிப்பதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி உருவானது. சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தொல்.திருமாவளவனும், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் ரவிக்குமாரும் பெற்ற வெற்றிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளை, பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

    இது ஒரு புதிய திருப்பம். இருவருமே பாராளுமன்றத்துக்கு செல்ல இருக்கிறார்கள். எழுத்தால், பேச்சால், எண்ணத்தால், செயலால் அனைவரையும் வசீகரிக்கக்கூடிய தலைவர் திருமாவளவனும், அதேபோல நல்ல நட்புடன் பழகும் எழுத்தாளரும், சிந்தனையாளருமான ரவிக்குமாரும் எம்.பி.க்களாக பாராளுமன்றத்துக்கு தமிழகத்துக்காக குரல் எழுப்ப செல்ல இருப்பது மிகுந்த மகிழ்ச்சி.

    இவ்வாறு அவர் கூறினார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.பி.க்கள் மு.க.ஸ்டாலின் தலைமையில் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. போட்டியிட்ட 19 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளது அக்கட்சியினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    வெற்றியை கருணாநிதிக்கு சமர்ப்பிக்கும் வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நேற்று காலை சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலையில் இருந்து கருணாநிதி நினைவிடத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.

    கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் உள்பட புதிய எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மு.க.ஸ்டாலின் தலைமையில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவரும் நினைவிடத்தை சுற்றி வலம்வந்தனர். அதைத்தொடர்ந்து அண்ணா நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து வணங்கினர்.

    அங்கிருந்து வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு வந்த அவர்கள் அங்குள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வணங்கினர். இதில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    பின்னர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் இல்லத்துக்கு சென்றனர். பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி கிடைத்ததற்காக மு.க. ஸ்டாலினுக்கும், வெற்றிபெற்ற அனைவருக்கும் க.அன்பழகன் வாழ்த்து தெரிவித்தார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றியை அ.ம.மு.க. பெற்ற ஓட்டுகள் பாதித்ததா? என்ற தகவல் வெளியாகி உள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க. கட்சியில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து அ.ம.மு.க. கட்சியை டி.டி.வி.தினகரன் தொடங்கினார். அந்த கட்சிக்கு அ.தி.மு.க.வினர் பலர் ஆதரவு தெரிவிப்பதாகவும், எனவே அந்த ஓட்டுகளை பிரித்து அ.தி.மு.க.வின் வெற்றியை அ.ம.மு.க. பாதிக்கும் என்றும் பரவலாக நம்பப்பட்டது.

    ஆனால் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு பெரிய பாதிப்பை அ.ம.மு.க.வினால் எல்லா தொகுதிகளிலும் தர முடியவில்லை. இது அ.ம.மு.க.வுக்கு அதிர்ச்சியையும், அ.தி.மு.க.வுக்கு சற்று நிம்மதியையும் கொடுத்துள்ளது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் தர்மபுரி, சிதம்பரம், ராமநாதபுரம் ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே அ.ம.மு.க. கட்சியால் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு பாதகத்தை ஏற்படுத்த முடிந்தது.

    தர்மபுரியில் தி.மு.க. வேட்பாளர் 5 லட்சத்து 74 ஆயிரத்து 988 ஓட்டுகளை பெற்றார். அங்கு அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியான பா.ம.க. வேட்பாளர் 5 லட்சத்து 4 ஆயிரத்து 235 ஓட்டுக்களை வாங்கியுள்ளார். அ.ம.மு.க. வேட்பாளர் 53 ஆயிரத்து 655 வாக்குகள் பெற்றார். இந்த வாக்குகள், பா.ம.க.வுக்கு கிடைத்திருந்தால் தி.மு.க.வுக்கு கூடுதல் நெருக்கடியை அளித்திருக்க முடியும்.

    சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 5 லட்சத்து 229 ஓட்டுகளை பெற்றது. அ.தி.மு.க.வுக்கு 4 லட்சத்து 97 ஆயிரத்து 10 வாக்குகள் கிடைத்தன. அ.ம.மு.க.வுக்கு 62 ஆயிரத்து 308 ஓட்டுகள் கிடைத்தன. இந்த ஓட்டுகள் கிடைத்திருந்தால் அ.தி.மு.க.வுக்கு வெற்றி கிடைத்திருக்கும்.

    ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 4 லட்சத்து 69 ஆயிரத்து 943 ஓட்டுகள் கிடைத்தன. அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ஜ.க.வுக்கு 3 லட்சத்து 42 ஆயிரத்து 821 ஓட்டுகள் வந்தன. அங்கு அ.ம.மு.க.வுக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 806 ஓட்டுகள் கிடைத்தன. அ.ம.மு.க.வின் ஓட்டுகள் கிடைத்திருந்தால் பா.ஜ.க. வெற்றி அடைந்திருக்க முடியும். ஆனால் வேறு தொகுதிகளில் அ.தி.மு.க.வின் வெற்றியை பாதிக்கும் அளவுக்கு அ.ம.மு.க.வுக்கு ஓட்டுகள் கிடைக்கவில்லை.

    அதுபோல 22 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் ஒரு சில தொகுதிகளில் அ.தி.மு.க.வின் வெற்றியை அ.ம.மு.க. பாதித்துள்ளது.

    வடசென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், கோவை ஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் தலா ஒரு லட்சத்துக்கும் மேலாக ஓட்டுகளை வாங்கி மக்கள் நீதி மய்யம் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. சில இடங்களில் அ.ம.மு.க.வை விட அதிக ஓட்டுகளை மக்கள் நீதி மய்யம் பெற்று 3-ம் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி தன்னுடைய பதவி ராஜினாமா முடிவை அறிவிப்பார் என பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தொடர்ந்து 2-வது முறையாக பெற்று உள்ளது. பா.ஜனதா கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் தற்போதைய தேர்தலில் 52 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது.

    பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதிகளை கூட பெற முடியவில்லை. 5 மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ், அந்த மாநிலங்களிலும் வெற்றியை தக்கவைக்கமுடியவில்லை.

    உத்தரபிரதேசத்தில் நேரு பரம்பரையின் பாரம்பரியமான அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோற்றது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் சோனியா காந்தி மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். கட்சியின் பொது செயலாளர் பதவி அளிக்கப்பட்டு தேர்தலில் பிரியங்கா காந்தி தீவிர பிரசாரம் செய்தும் காங்கிரசுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற உள்ளது. கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் சந்தித்த மிகப்பெரிய தோல்வி, மக்களிடையே எந்த விஷயங்களை சரியாக கொண்டு சேர்க்கவில்லை என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற இருக்கும் நிலையில் சில மாநிலங்களின் தலைவர்கள் தங்கள் கட்சி பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி உள்பட பல முன்னணி தலைவர்கள் அடைந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று அந்த மாநில தலைவரும், நடிகருமான ராஜ் பாப்பார் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்திக்கு நேற்று அனுப்பினார்.

    இதேபோல் ஒடிசா மாநில சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் அடைந்த படுதோல்விக்கு பொறுப்பு ஏற்று ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்திக்கு அந்த மாநில தலைவர் நிரஞ்சன் பட்நாயக் அனுப்பி இருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பு ஏற்கும் வகையில் அந்த மாநில பிரசார குழு தலைவர் எச்.கே.பாட்டீல் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து மேலும் பல மாநில காங்கிரஸ் தலைவர்களும், பொறுப்பாளர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    மாநில தலைவர்களின் ராஜினாமாவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தியும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதை முறைப்படி அவர் காரிய கமிட்டி கூட்டத்தில் அறிவிப்பார் என பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனினும் இதை காரிய கமிட்டி ஏற்குமா? என்பது இன்று தான் தெரியும்.

    முன்னதாக, பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் படுதோல்விக்கு தானே பொறுப்பு ஏற்பதாக ராகுல் காந்தி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருப்பரங்குன்றம் சட்டசபை இடைத்தேர்தலில் 8-வது சுற்று முடிவில் தி.மு.க. வேட்பாளர் சரவணன் 32 ஆயிரத்து 29 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். அ.தி.மு.க. வேட்பாளர் 28 ஆயிரத்து 425 வாக்குகள் பெற்றுள்ளார்.

    திருப்பரங்குன்றம், மே. 23-

    திருப்பரங்குன்றம் சட்ட சபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக முனியாண்டி, தி.மு.க. வேட்பாளராக டாக்டர் சரவணன், அ.ம.மு.க. வேட்பாளராக மகேந்திரன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேல், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ரேவதி உள்பட 37 பேர் போட்டியிட்டனர்.

    இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மதுரை மருத்துவக் கல்லூரியில் இன்று எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன.

    தி.மு.க- 3571

    அ.தி.மு.க- 3086

    அ.ம.மு.க- 1885

    தி.மு.க- 3480

    அ.தி.மு.க- 3196

    அ.ம.மு.க- 1497

    தி.மு.க- 3589

    அ.தி.மு.க- 3466

    அ.ம.மு.க- 2808

    தி.மு.க- 4692

    அ.தி.மு.க- 4132

    அ.ம.மு.க- 2108

    தி.மு.க- 3505

    அ.தி.மு.க- 2554

    அ.ம.மு.க- 1361

    தி.மு.க- 3847

    அ.தி.மு.க- 3606

    அ.ம.மு.க- 1133

    தி.மு.க- 4304

    அ.தி.மு.க- 3758

    அ.ம.மு.க- 1198

    தி.மு.க- 5041

    அ.தி.மு.க- 4627

    அ.ம.மு.க- 1368

    8-வது சுற்று முடிவில் தி.மு.க. வேட்பாளர் சரவணன் 32 ஆயிரத்து 029 வாக்குகள் பெற்றுள்ளார். அ.தி.மு.க. வேட்பாளர் 28 ஆயிரத்து 425 வாக்குகள் பெற்றுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo