செய்திகள்

பிரியங்கா மிக திறமையானவர் எனக்கு உதவுவார் - ராகுல் காந்தி மகிழ்ச்சி

Published On 2019-01-23 23:08 GMT   |   Update On 2019-01-23 23:08 GMT
பாராளுமன்ற தேர்தலில் எனது சகோதரி பிரியங்கா எனக்கு உதவுவார் என்றும், அவர் மிகவும் திறமை வாய்ந்தவர் என அவரது சகோதரர் ராகுல் காந்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். #PriyankaGandhi #RahulGandhi
பிரியங்கா நேரடி அரசியலில் குதித்து இருப்பதற்கு அவரது சகோதரர் ராகுல் காந்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “பிரியங்கா நேரடி அரசியலில் குதித்து இருப்பதை வரவேற்கிறேன். பாராளுமன்ற தேர்தலில் எனது சகோதரி பிரியங்கா எனக்கு உதவுவார் என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அவர் மிகவும் திறமை வாய்ந்தவர்” என கூறி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கும் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “ஜோதிர் ஆதித்ய சிந்தியா சக்திவாய்ந்த இளம் தலைவர்” என குறிப்பிட்டுள்ளார். #PriyankaGandhi #RahulGandhi 
Tags:    

Similar News