செய்திகள்

ரூ.85,949 கோடிக்கான துணை மானியக் கோரிக்கை மாநிலங்களவையில் தாக்கல்

Published On 2018-12-21 10:21 GMT   |   Update On 2018-12-21 10:21 GMT
மத்திய அரசின் ரூ.85,949 கோடிக்கான துணை மானியக் கோரிக்கை மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. #SupplementaryDemand #ArunJaitley
புதுடெல்லி:

கூடுதல் செலவினத்தை மேற்கொள்ள வசதியாக, இரண்டாம் கட்ட துணை மானிய கோரிக்கை இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி அருண் ஜெட்லி இதனை தாக்கல் செய்தார். அதில், 2018-19ம் நிதியாண்டில் கூடுதல் செலவினத்தை மேற்கொள்வதற்கு ரூ.85,948 கோடியே 86 லட்சம் தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதில், கிட்டத்தட்ட பாதி தொகையானது பொதுத்துறை வங்கிகளுக்கு நிதி வழங்குவதற்காக பயன்படுத்தப்படும். அரசு பங்கு பத்திரங்கள் மூலம் 41000 கோடி ரூபாய் அரசுத்துறை வங்கிகளில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவை சரிவிலிருந்து மீட்பதற்கு 2345 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த துணை மானியக்கோரிக்கை மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்படும். 

ஆனால், துணை மானியக்கோரிக்கை மீது விவாததம் தொடங்குவதற்கு முன், ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தியது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்தார். #SupplementaryDemand #ArunJaitley
Tags:    

Similar News