செய்திகள்

ராஜஸ்தானில் 8 சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவை பெற சச்சின் பைலட் பேச்சுவார்த்தை

Published On 2018-12-11 08:06 GMT   |   Update On 2018-12-11 08:06 GMT
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியமைக்க காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைப்பதில் இழுபறி நீடிப்பதால், 8 சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவை பெறுவற்கு சச்சின் பைலட் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. #Results2018 #RajasthanElections2018 #SachinPilot
ஜெய்ப்பூர்:

பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில், பாஜக ஆளும் மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரசின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

ஆனால், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. ஆனாலும் மெஜாரிட்டியை நெருங்கவில்லை. பாஜகவும் காங்கிரசை நெருங்கி வருவதால் இழுபறி நீடிக்கிறது. ராஜஸ்தானில் ஆட்சியமைக்க 100 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கூட்டணி மதியம் வரை 93 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

எனவே, மெஜாரிட்டியை உறுதி செய்வதற்காக 8 சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவை பெற காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாகவும், இதற்காக சச்சின் பைலட் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



ராஜஸ்தான் மாநில தேர்தல் வெற்றி குறித்து சச்சின் பைலட் கூறுகையில், “ராஜஸ்தான் மக்கள் எங்களுக்கு ஆசி வழங்கி உள்ளனர். பாஜகவின் அரசியலுக்கும் கொள்கைகளுக்கும் எதிராக வாக்களித்துள்ளனர். பெரும்பாலான பாஜக எம்எல்ஏக்கள் பின்தங்கி உள்ளனர். எனவே, ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டியை நிச்சயம் பெறுவோம். ஆனாலும், பாஜகவுக்கு எதிராக ஒத்த கருத்துடைய கட்சிகளை வரவேற்கிறோம். அவர்கள் எங்களுடன் தொடர்புகொண்டு பேசி வருகின்றனர்” என்றார். #Results2018 #RajasthanElections2018 #SachinPilot
Tags:    

Similar News