search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்"

    • ராஜஸ்தான் முதல் மந்திரியாக பஜன்லால் சர்மா இன்று தேர்வு செய்யப்பட்டார்.
    • அவருக்கு பா.ஜ.க. தலைவர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 25-ம் தேதி நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 115 தொகுதிகளைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ் 69 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி தோல்வி அடைந்தது. தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால் அசோக் கெலாட் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    இதற்கிடையே, ராஜஸ்தானில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பஜன்லால் சர்மாவை ராஜஸ்தான் முதல் மந்திரியாக தேர்வு செய்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    துணை முதல் மந்திரிகளாக தியா சிங் மற்றும் பிரேம் சந்த் பெய்வா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சபாநாயகராக வசுதேவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், முதல் முறையாக சாங்கனேர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற எம்.எல்.ஏ.வான பஜன்லால் சர்மா ராஜஸ்தான் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டதற்கு ராஜ்நாத் சிங், வசுந்தரா ராஜே உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • ராஜஸ்தானில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
    • ராஜஸ்தான் முதல் மந்திரியாக பஜன்லால் சர்மாவை நியமித்து ராஜ்நாத் சிங் அறிவிப்பு வெளியிட்டார்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் 199 சட்டமன்ற இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதல் பா.ஜனதா 115 இடங்களில் வெற்றி பெற்றது.

    ராஜஸ்தானில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய துணை தலைவர் சரோஜ் பாண்டே, தேசிய பொது செயலாளர் வினோத் டவ்தே ஆகிய துணை பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.

    இந்தக் கூட்டத்தில் முதல் மந்திரி யார் என்பது தேர்வு செய்யப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக பஜன்லால் சர்மாவை நியமித்து ராஜ்நாத் சிங் அறிவிப்பு வெளியிட்டார்.

    முதல் மந்திரிக்கான போட்டியில் முன்னாள் முதல் மந்திரி வசுந்தரா ராஜே, மத்திய மந்திரிகள் அர்ஜூன் ராம் மெஹ்வால், கஜேந்திர சிங் ஷெகாவத், அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோரும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோபிசந்த் மீனா, சங்கர் சிங் ராவத் உள்பட 20-க்கும் மேற்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வசுந்தரா ராஜேவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
    • ராஜஸ்தான் பா.ஜ.க. தலைவர் சிபி ஜோஷியை தேர்தல் பொறுப்பாளராக இருந்த அருண் சிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    ராஜஸ்தானில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வதில் பாரதிய ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் பிரசாரத்தின்போது முதல்-மந்திரியாக யாரும் முன்னிறுத்தப்படவில்லை.

    இந்நிலையில் தேர்தலில் அபார வெற்றி பெற்று கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து புதிய முதல்-மந்திரியாக யாரை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி கட்சியின் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

    முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே, முன்னாள் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்த தியா குமாரி,

    எம்.பி. பாபா பாலக்நாத், மத்திய மந்திரி கஜேந்திர சகாவாத் ஆகியோர் முதல்-மந்திரி பதவிக்கான பரிசீலனையில் உள்ளனர்.

    இந்நிலையில் கோபிசந்த் மீனா, சங்கர் சிங் ராவத் உள்பட 20-க்கும் மேற்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வசுந்தரா ராஜேவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்கள் முதல்-மந்திரியாக வசுந்தரா ராஜேவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

    இதுவரை முதல்- மந்திரியை கட்சி தலைமை தேர்வு செய்யவில்லை. இந்நிலையில் வசுந்தரா ராஜே வீட்டுக்கு சென்ற 20 எம்.எல்.ஏ.க்களும் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும் சந்தித்துள்ளனர்.

    இதுகுறித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேஷ் ராவத் கூறுகையில், வசுந்தரா ராஜே தனது பதவி காலத்தில் முதல்-மந்திரியாக சிறப்பாக செயல்பட்டார் என்றார்.

    இதற்கிடையே ராஜஸ்தான் பா.ஜ.க. தலைவர் சிபி ஜோஷியை தேர்தல் பொறுப்பாளராக இருந்த அருண் சிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது முதலமைச்சர் பதவி குறித்து கேட்டபோது, "முதலமைச்சர் யார் என்பதை உயர்மட்ட குழு முடிவு செய்யும். அதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்" என்றார்.

    புதிய முதல்-மந்திரி யார்? என்பது குறித்து பா.ஜ.க. தலைமை இன்று அறிவிப்பு வெளியிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • வசுந்தரா ராஜே காங்கிரஸ் வேட்பாளரைவிட 53,193 வாக்குகள் கூடுதலாக பெற்று வென்றார்.
    • வித்யாதர் நகர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. எம்.பி. தியா குமாரி 71,368 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. கட்சி 114 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 70 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், ராஜஸ்தானில் மாலை 4 மணி நிலவரப்படி 27 தொகுதிகளில் பாஜகவும், 19 தொகுதிகளில் காங்கிரசும் வென்றுள்ளது.

    இதில் ராஜஸ்தானின் முன்னாள் முதல் மந்திரியும், பா.ஜ.க. வேட்பாளருமான வசுந்தரா ராஜே 1,38,831 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் காங்கிரஸ் வேட்பாளரைவிட 53,193 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.


    இதேபோல், வித்யாதர் நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக எம்பியான தியா குமாரி 158516 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இவரை 71368 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த தேர்தலை விட அதிகமாக 47 இடங்களில் பா.ஜனதா முன்னிலைப் பெற்றுள்ளது.
    • வசுந்தரா ராஜே சிந்தியா முதலமைச்சர் போட்டியில் இருக்கிறார்.

    4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ராஜஸ்தானில் மாறிமாறிதான் தேர்தல் முடிவு இருந்துள்ளது. கடந்த முறை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால், இந்த முறை பா.ஜனதா வெற்றி பெறும் எனக் கூறப்பட்டது.

    பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் தெரிவித்தன. என்றாலும், மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நாங்கள் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என அசோக் கெலாட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்கள்.

    ஆனால், தேர்தல் முடிவு பா.ஜனதாவுக்கு ஆதரவாக அமைந்துள்ளது. 199 தொகுதிகளில் பா.ஜனதா 112 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க இருக்கிறது.

    ராஜஸ்தானில் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தாமல் பா.ஜனதா தேர்தலை சந்தித்தது. இதனால் முதலமைச்சர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    கடந்த முறை முதலமைச்சராக இருந்த வசுந்தரா ராஜே சிந்தியாவை பா.ஜனதா ஓரங்கட்டுகிறது என தேர்தல் பிசாரத்தின்போது தெரிவிக்கப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில் பிரதமர் மோடியின் தொடக்கக்கால பிரசாரத்தில் வசுந்தரா ராஜே சிந்தியா கலந்து கொள்ளவில்லை. கடைசி கட்டத்தில் பிரமதர் மோடியுடன் ஒரு மேடையில் தோன்றினார். இதனால் வசுந்தரா ராஜே சிந்தியா மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்க வாய்ப்புள்ளது. இவர் ஜல்ராபதான் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

     அதேநேரத்தில் பா.ஜனதா எம்.பி.யான தியா குமாரிக்கு வித்யாநகர் தொகுதியில் போட்டியிட கட்சி மேலிடம் வாய்ப்பு வழங்கியது. இவரும் அதிக வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தும் தேர்தல் களத்தில் உள்ளார்.  இவர்கள் மூன்று பேரில் வசுந்தரா ராஜே, கஜேந்திர சிங் ஷெகாவத் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இதற்கிடையே சாமியாரும், அல்வார் தொகுதி எம்.பி.யுமான மஹந்த் பாலக்நாத் ராஜஸ்தான் முதலமைச்சர் பதவிக்கு முன்னணி போட்டியாளராக இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

    திஜாரா தொகுதியில் போட்டியிடும் பாலக்நாத் காங்கிரஸ் வேட்பாளரை விட மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலைப் பெற்றுள்ளார்.

    இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன் 40 வயதான பாலக்நாத் சிவன் கோவில் சென்று தரிசனம் மேற்கொண்டார். அப்போது, பா.ஜனதா 120 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் எனத் தெரிவித்தார்.

    வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான நேற்று பாலக்நாத், அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷை நேற்று பா.ஜனதா தலைமைக்கழகத்தில் சந்தித்துள்ளார். அவரிடம் சந்தோஷ் உடனான சந்திப்பு குறித்து கேட்டபோது, இது தனிப்பட்ட சந்திப்பு என முடித்துக் கொண்டார்.

     மேலும், முதலமைச்சர் பதவியை பொறுத்தவரையில் பா.ஜனதாவின் முகம் பிரதமர் மோடி. அவரது தலைமையின் கீழ் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். முதலமைச்சர் யார் என்பதை கட்சி முடிவு செய்யும். எம்.பி.யாக மக்களுக்கு சேவை புரிய விரும்புகிறேன். அதனால் நான் திருப்தி அடைந்துள்ளேன்" என்றார்.

    உத்தர பிரதேசத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் யோகி ஆதித்தயநாத்தை பா.ஜனதா முதலமைச்சராக்கியது. அதற்கு முன் அவர் எம்.பி.யாகத்தான் இருந்தார். யோகி ஆதித்யநாத் நாத் சமூகத்தை சேர்ந்தவர். பாலக்நாத்தும் நாத் சமூகத்தை சேர்ந்தவர். அல்வாரில் அவருக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது.

    6 வயதிலேயே சன்னியாசியாக சென்றார். அவரது குடும்பத்தினர் அவரை துறவியாக்க வேண்டும் என முடிவு செய்தனர். அதன்படி துறவியானார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த முறை 109 தொகுதிகளை பிடித்திருந்தது.
    • தற்போது 150 இடங்களை தாண்டி பிடிக்கும் நிலையில் உள்ளது.

    230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியை பிடித்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஜோதிராதித்யா சிந்தியா 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்களுடன் பா.ஜனதாவில் இணைந்தார். இதனால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.

    தற்போது எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கடும் தேர்தல் பிரசாரம் செய்தது. இருந்தபோதிலும், தேர்தல் முடிவில் அந்த கட்சிக்கு பின்னடைவுதான் ஏற்பட்டுள்ளது.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பா.ஜனதா முன்னிலை வகித்தது. நேரம் ஆகஆக பா.ஜனதாவின் முன்னிலை அமோகமாக இருந்தது.

    11 மணி நிலவரப்படி 155 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலை விட 46 இடங்கள் அதிகமாக பெறும் நிலையில் உள்ளது. இதனால் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சராவது உறுதியாகிவிட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கடந்த தேர்தலை விட 35 இடங்களில் பின்தங்கியுள்ளது.
    • பா.ஜனதா 39 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலில் 90 இடங்களில் 68 இடங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இந்த முறையும் காங்கிரஸ்தான் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது. இதனால் எளிதாக காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்பின் பா.ஜனதா முன்னிலை வகிக்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் இரு கட்சிகளும் தலா 45 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.

    10.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் 52 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றது. அதன்பின் பா.ஜனதா முன்னிலை வகிக்க தொடங்கியது. தொடர்ந்து பா.ஜனதா முன்னிலை பெற்றதுடன், ஆட்சி அமைப்பதற்கான 46 இடங்களையும் தாண்டி முன்னணி பெற்றது. பா.ஜனதா 54 இடங்களில் முன்னணி வகிக்கிறது. காங்கிரஸ் 33 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கானாவில் பா.ஜனதா கூட்டணி 11 இடங்களில் முன்னிலை.
    • சத்தீஸ்கரில் பா.ஜனதா கூட்டணி 33 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் பிரகாசமான வாய்ப்பு உள்ளது. அதேபோல் மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது.

    ராஜஸ்தானில் கடும் இழுபறி நீடித்து வருகிறது. தற்போதைய நிலையில் பா.ஜனதா 102 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 84 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பா.ஜனதா நான்கு மாநிலங்களில் கடந்த தேர்தலை விட கூடுதல் இடங்களை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் 100 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலை விட 8 இடங்கள் அதிகமாகும்.

    ராஜஸ்தானில் 101 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.. கடந்த தேர்தலை விட 33 இடங்கள் அதிகமாகும்.

    சத்தீஸ்கரில் பா.ஜனதா கூட்டணி 33 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலை விட 20 இடங்கள் அதிகமாகும்.

    தெலுங்கானாவில் பா.ஜனதா கூட்டணி 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலை விட 11 இடங்கள் அதிகமாகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது.
    • தெலுங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது.

    4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டன. அதனைத்தொடர்ந்து 8.30 மணிக்கு வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன

    காலை 8.40 நிலவரப்படி பா.ஜனதா 87 இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்கிளிலும் முன்னிலை வகித்தன. பின்னர் நேரம் செல்ல செல்ல இரு கட்சிகளும் மாறிமாறி முன்னிலைப் பெற்று வந்தன. இதனால் கடும் இழுபறி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், 10 மணி நிலவரப்படி பா.ஜனதா முன்னிலை பெற்றது. 199 இடங்களில் 103 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய பிரதேசத்தில் மாநிலத்தில் 252 பெண்கள் உள்பட 2,533 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
    • ராஜஸ்தானில் 199 இடங்களுக்கு கடந்த 25-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் 74.62 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த 2 மாதங்களாக சட்டசபை தேர்தல் திருவிழா களை கட்டியிருந்தது.

    இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதாவும், காங்கிரசும் நேரடியாக மல்லுக்கட்டின. தெலுங்கானாவில் இந்த 2 தேசிய கட்சிகளுடன் பாரதிய ராஷ்டிர சமிதியும் சேர்ந்ததால் மும்முனை போட்டி நிலவியது.

    மிசோரமில் ஆளும் மிசோ தேசிய முன்னணியும், சோரம் மக்களின் இயக்கமும் நேரடியாக மோதிக்கொள்ள, காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய கட்சிகளும் சேர்ந்து களத்தை வலுப்படுத்தின.

    மத்திய பிரதேசம்

    பா.ஜனதா ஆளும் மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 17-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. மாநிலத்தில் 252 பெண்கள் உள்பட 2,533 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    அங்கு தபால் வாக்குகளையும் சேர்த்து 77.82 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. இந்த வாக்குகள் அனைத்தும் 52 மாவட்டங்களின் தலைநகரங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.

    முதல்- மந்திரி சிவராஜ் சிங் சவுகான், முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத், மத்திய மந்திரிகள் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல், பக்கன்சிங் குலாஸ்தே, பா.ஜனதா பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா என ஏராளமான முக்கிய வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இன்று தெரியவரும்.

    மாநிலத்தில் பா.ஜனதாவே மீண்டும் ஆட்சியமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்து இருந்தன. இது அந்த கட்சியினருக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது.

    அதேநேரம் இதை புறக்கணித்துள்ள காங்கிரசார், மாநிலத்தில் ஆட்சியை பிடிப்போம் என நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை பிடித்தும், 2020-ம் ஆண்டு பா.ஜனதாவிடம் பறிகொடுத்ததைப்போல இந்த முறை நடக்காது என்றும் அவர்கள் உறுதிபட கூறியுள்ளனர்.

    ராஜஸ்தான்

    200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 199 இடங்களுக்கு கடந்த 25-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் 74.62 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    முதல்-மந்திரி அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களும், முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே, எதிர்க்கட்சி தலைவர் ராஜேந்திர ரத்தோர் உள்ளிட்ட பா.ஜனதா வேட்பாளர்களும் தங்கள் அரசியல் எதிர்காலத்தை அறிய ஆவலுடன் உள்ளனர்.

    மாநிலத்தில் கடந்த சில தேர்தல்களாகவே ஒவ்வொரு 5 ஆண்டும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாறிமாறி ஆட்சிக்கு வருகின்றன.

    தற்போது அங்கே காங்கிரஸ் ஆண்டுவரும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகள் தங்களது ஆட்சி என பா.ஜனதாவினர் நம்புகின்றனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் அவர்களுக்கு ஆதரவாகவே உள்ளன.

    சத்தீஸ்கர்

    காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரில் கடந்த மாதம் 7 மற்றும் 17-ந்தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 76.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    முதல்-மந்திரி பூபேஷ் பாகேல், துணை முதல்-மந்திரி சிங் தியோ, முன்னாள் முதல்-மந்திரி ராமன் சிங் உள்பட ஆளும் காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 1,181 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இன்று தெரியவரும்.

    அங்கு தேர்தலுக்கு பின்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆளும் காங்கிரசே மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றும் என தெரிய வந்திருக்கிறது.

    தெலுங்கானா

    பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) ஆளும் தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கும் கடந்த 30-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. அங்கு பி.ஆர்.எஸ்., காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே மும்முனை போட்டி நிலவியது.

    இந்த கட்சிகளை சேர்ந்த 2,290 வேட்பாளர்கள் போட்டிக்கோதாவில் உள்ளனர். இதில் முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், அவரது மகன் கே.டி. ராமாராவ், காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, பா.ஜனதா எம்.பி.க்கள் பண்டி சஞ்சய் குமார், அரவிந்த் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். மாநில தேர்தலில் 71.34 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    தெலுங்கானா பிரிவினைக்கு முக்கிய பங்காற்றிய சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி, மாநிலத்தில் கடந்த 2 முறையாக தொடர்ந்து ஆட்சியில் உள்ளது. அங்கு ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் அந்த கட்சி உள்ளது.

    ஆனால் இந்த முறை மாநில மக்கள் மாற்றத்தை சிந்தித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்து உள்ளன.

    மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரசை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியும் இந்த தேர்தல்களை அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாகவே கருதி களப்பணி ஆற்றின.

    எனவே இந்த மாநிலங்களின் தேர்தல் முடிவுகளுக்காக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசமும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறது. இவ்வாறு ஆவலை தூண்டியிருக்கும் இந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது இன்று பிற்பலுக்குள் தெரிந்துவிடும்.

    • நான்கு 4 மாநிலங்களில் கடந்த 30-ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

    தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த 30-ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் கடந்த இரண்டு நாட்களாக செய்யப்பட்டது.

    இன்று காலை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்த வேட்பாளர்கள், கட்சி முகவர்கள் கடும் சோதனைக்குப்பின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. அதன்பின் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

    • ம.பி.யில் பா.ஜனதா 100 முதல் 123 இடங்களையும், காங்கிரஸ் 102 முதல் 125 இடங்களையும் பெறும் என தெரிய வந்துள்ளது.
    • 86 முதல் 106 இடங்கள் வரை ஆளும் காங்கிரஸ் பெறும் எனவும் பா.ஜனதா 80 முதல் 100 இடங்கள் வரை கைப்பற்றும்

    5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பா.ஜனதாவுக்கும், தெலுங்கானா, சத்தீஸ்காரில் காங்கிரசுக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறியுள்ளன.

    இந்த நிலையில் கருத்து கணிப்பு குறித்து தலைவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்...

    ராஜஸ்தான் மாநில மந்திரி மகோஷ ஜோஷி: முழு மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் ராஜஸ்தானில ஆட்சியமைக்கும். அதுபோக அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்.

    சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்: மற்ற மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு சிறப்பாக உள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் சூழ்நிலைய நன்றாக இருக்கிறது. தெலுங்கானாவில் நாங்கள் 80 சதவீத இடங்களை பிடிப்போம். காங்கிரஸ் 4 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும்.

    பா.ஜனதா சீனியர் தலைவர் சரோஜ் பாண்டே (சத்தீஸ்கர்): பா.ஜனதா ஏராளமான வளர்ச்சியை கொடுத்துள்ளது. நாங்கள் எங்கெல்லாம் ஆட்சி செய்து வருகிறமோ, அங்கெல்லாம் ஆட்சி அமைப்போம். அதேபோல் ஆட்சி செய்யாத மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்போம். மோடி மீதான நம்பிக்கை மக்கள் காட்டியுள்ளனர்.

    தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி: இது காங்கிரஸ்- பிஆர்எஸ் இடையிலான தேர்தல் அல்ல. 4 கோடி மக்கள் பிஆர்எஸ்-க்கு எதிராக உள்ளனர். இது தெலுங்கானா மக்களின் வெற்றி. முதல் மந்திரிசபை கூட்டத்தில் 6 வாக்குறுதிகளை நிறைவேற்ற அனுமதி பெற்று செயல்படுத்துவோம். நாங்கள் முழு வெற்றி பெறுவோம். இதைத்தான் கருத்துக் கணிப்பு காட்டுகிறது.

    சத்தீஸ்கர் மாநில பா.ஜனதா தலைவர் அருண் சாயோ: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வரையறுக்கப்பட்ட மாதிரி அளவைக் கொண்டுள்ளன. பா.ஜனதா ஆட்சி அமைக்கும்.

    ராபர்ட் வதேரா: நான் கருத்துக் கணிப்பை பெரிய அளவில் நம்பவில்லை. நான் உண்மையான முடிவை நம்புகிறவன். நான் கடந்த சில மாதங்களாக ஏராளமான மக்களை சந்தித்தேன். அவர்கள் விரக்தியில் இருந்தனர். குறிப்பாக மத்திய பிரதேசத்தில். ஆட்சியை கவிழ்த்தது தொடர்பான விரக்தி தெரிந்தது.

    பா.ஜனதா எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாகூர்: அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதா ஆட்சி அமைக்கும். பா.ஜனதா செய்த பணிக்காக மக்கள் வாக்களித்துள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பிரேம் பிரகாஷ் பாண்டே: கருத்துக் கணிப்பு குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவிக்கின்றனர். ஆனால், பா.ஜனதா ஆட்சி அமைக்கும். இதற்கு காரணம் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

    காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங்: கருத்துக் கணிப்பு மிகவும் வித்தியாசமாக உள்ளது. நாங்கள் அது குறித்து எந்த கருத்தையும் சொல்ல முடியாது. மத்திய பிரதேசத்தில் 130 தொகுதிகளுக்கு மேல் பிடிக்கும் என்ற உறுதியை என்னால் உங்களுக்கு கொடுக்க முடியும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். முதல்வர் சிவ்சராஜ் சிங் சவுகான் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.

    பா.ஜனதா எம்.பி. ரதோர் (ராஜஸ்தான்): மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். முழு மெஜாரிட்டியுடன் ராஜஸ்தானில் பா.ஜனதா ஆட்சியமைக்கும். கருத்துக் கணிப்பு வரையறுக்கப்பட்ட பகுதிக்கானது. 3-ந்தேதி முடிவு பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருக்கும்.

    ×