செய்திகள்

ரேபரேலி தொகுதியில் பிரியங்காவுக்கு எதிரான சுவரொட்டிகளால் பரபரப்பு

Published On 2018-10-22 19:36 GMT   |   Update On 2018-10-22 19:36 GMT
ரேபரேலி தொகுதியில் ‘பிரியங்காவை காணவில்லை’ என பல இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ள சம்பவம் காங்கிரஸ் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #PriyankaGandhi #RaeBareli #Missing
ரேபரேலி:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதி எம்.பி. ஆவார். அங்கு சோனியா காந்திக்கு பதிலாக அவரது மகள் பிரியங்காதான் கட்சி நடவடிக்கைகளை கவனித்து வருகிறார். ஆனால் சமீப காலமாக அவர் தொகுதிக்கு செல்லவில்லை என தெரிகிறது.



இதனால் ஆத்திரம் அடைந்த அந்த தொகுதிவாசிகள் ‘பிரியங்காவை காணவில்லை’ என பல இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். ரேபரேலி தொகுதி மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினர் எனக்கூறும் சோனியா குடும்பத்தினர், தற்போது அதை மறந்துவிட்டனர் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த சுவரொட்டிகளால் தொகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் மாநில காங்கிரசிலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #PriyankaGandhi #RaeBareli #Missing 
Tags:    

Similar News