செய்திகள்

டெல்லியில் முன்னாள் பிரதமர்கள் அருங்காட்சியகம் - மத்திய மந்திரிகள் அடிக்கல் நாட்டினர்

Published On 2018-10-15 13:48 GMT   |   Update On 2018-10-15 13:48 GMT
இந்தியாவை வடிவமைப்பதில் முன்னாள் பிரதமர்கள் ஆற்றிய சேவைகளை நினைவுகூரும் வகையில் டெல்லியில் அமையவுள்ள அருங்காட்சியகத்துக்கு மத்திய மந்திரிகள் இன்று அடிக்கல் நாட்டினர். #PrimeMinistersMuseum #TeenMurtiEstate
புதுடெல்லி:

சுதந்திரம் பெற்ற பின்னர் நமது நாட்டின் பிரதமர்களாக பல தலைவர்கள் பதவி வகித்துள்ளனர். இவர்களில் சிலர் மட்டுமே இன்று உயிருடன் உள்ளனர். பலர் மறைந்து விட்டதால் அவர்களின் பெருமைகள் மற்றும் நாடு அவர்களால் அடைந்த வளர்ச்சி ஆகியவற்றை இன்றைய தலைமுறையினர் அறிய முடியவதில்லை.

இந்த குறையை போக்கும் வகையில் டெல்லியில் உள்ள தீன் மூர்த்தி எஸ்டேட் வளாகத்தில் முன்னாள் பிரதமர்கள் அருங்காட்சியகம் ஒன்றை நிறுவ மத்திய அரசு திட்டமிட்டது.

இந்நிலையில், தீன் மூர்த்தி எஸ்டேட் வளாகத்தில் இந்த அருங்காட்சியகம் கட்டிட பணிகளுக்கு மத்திய கலாசாரத்துறை மந்திரி மகேஷ் சர்மா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை மந்திரி ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இன்று அடிக்கல் நாட்டினர். #PrimeMinistersMuseum #TeenMurtiEstate
Tags:    

Similar News