செய்திகள்
சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்ட வேண்டும் - பிரபல நடிகர் பேச்சு
சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்ட வேண்டும் என பிரபல மலையாள நடிகர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #Sabarimalatemple #rippedinhalf #KollamThulasi
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் அளித்த தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
வெட்டப்பட்ட உடலின் ஒரு துண்டை டெல்லிக்கும் மற்றொரு துண்டை திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல் மந்திரியின் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என இவர் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #Sabarimalatemple #rippedinhalf #KollamThulasi
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் அளித்த தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கேரள மாநிலம் கொல்லம் நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல மலையாள குணச்சித்திர நடிகரான கொல்லம் துளசி என்பவர், ‘சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்ட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.