செய்திகள்

டெல்லியில் கணவரின் நாக்கை கடித்து துண்டாக்கிய மனைவி

Published On 2018-09-24 07:09 GMT   |   Update On 2018-09-24 07:09 GMT
டெல்லியில் குடும்ப சண்டையில் கர்ப்பிணி பெண் தனது கணவரின் நாக்கை கடித்து துண்டாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #delhiwoman

புதுடெல்லி, செப். 24-

டெல்லி ரங்கோலா பகுதியில் உள்ள விகாஸ் நகரில் வசித்து வருபவர் கரண்சிங்.

தெருக்கூத்து கலைஞரான இவருக்கும், காஜல் என்ற பெண்ணிற்கும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது.

காஜல் தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று அவருக்கும் அவரது கணவர் கரண்சிங்குக்கும் கலை நிகழ்ச்சி தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

கரண்சிங்கின் பெற்றோர் தலையிட்டு அவர்களது சண்டையை தீர்த்து வைத் தனர். பிறகு இரவு சாப் பிட்டு முடித்ததும் தூங்க சென்றனர். அப்போதும் கணவன்-மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டது.

சண்டையின் போது கரண்சிங் மிகவும் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த காஜல், ‘‘இந்த நாக்குதானே பேசு கிறது’’ என்று சொல்லியபடி அவர் நாக்கை கடித்து துண்டாக்கினார்.

நாக்கு பாதி துண்டான நிலையில் ரத்தம் வழிந் தோட கரண்சிங் அலறி துடித் தார். உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப் பட்ட பிறகு மேல் சிகிச்சைக் காக அவர் ஜப்தர்சங் மருத் துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

டாக்டர்கள் நீண்ட நேரம் அவருக்கு சிகிச்சை அளித் தனர். துண்டான நாக்கை ஒட்ட வைக்க முயற்சி நடந்தது. ஆனால் நாக்கை ஒட்டவைக்க முடியவில்லை.

இதனால் கரண்சிங்கால் மீண்டும் பேச முடியுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள் ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரித்தனர். பிறகு கர்ப்பிணி பெண்ணான காஜலை கைது செய்தனர்.

Tags:    

Similar News