செய்திகள்
பிரதமர் மோடியுடன் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி சந்திப்பு
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி பிரதமர் மோடியை டெல்லியில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். #Modi #AshrafGhani
புதுடெல்லி:
இதுதொடர்பாக, வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் டுவிட்டரில் கூறுகையில், இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு, தலிபான்களுடனான சமரச உடன்படிக்கை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது என பதிவிட்டுள்ளார்.
மேலும், ஆப்கானிஸ்தானில் இந்தியா உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு பணிகளின் நிலவரம் பற்றியும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர். ஆப்கானிஸ்தானில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அஷ்ரப் கனி இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Modi #AshrafGhani
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, ஒருநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். இன்று காலை தலைநகர் டெல்லி வந்தடைந்த அஷ்ரப் கனிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி சந்தித்து பேசினார்.
இதுதொடர்பாக, வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் டுவிட்டரில் கூறுகையில், இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு, தலிபான்களுடனான சமரச உடன்படிக்கை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது என பதிவிட்டுள்ளார்.
மேலும், ஆப்கானிஸ்தானில் இந்தியா உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு பணிகளின் நிலவரம் பற்றியும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர். ஆப்கானிஸ்தானில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அஷ்ரப் கனி இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Modi #AshrafGhani