செய்திகள்

முன்னாள் மத்திய மந்திரி உடல்நலக்குறைவால் மரணம்

Published On 2018-09-16 06:51 GMT   |   Update On 2018-09-16 06:51 GMT
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சத்ய பிரகாஷ் மால்வியா உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை மரணமடைந்தார். #RIPSatyaPrakashMalviya
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மால்வியாநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை பெட்ரோலிய துறை முன்னாள் மத்திய மந்திரி சத்ய பிரகாஷ் மால்வியா மரணமடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு வயது 84.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், முன்னாள் பிரதமர் சந்திர சேகர் தலைமையிலான ஆட்சியில் பெட்ரோலியத்துறை மந்திரியாக இருந்தவர். மேலும், உத்தரப்பிரதேச மாநில சட்டசபையின் சுற்றுச்சூழல் துறை மந்திரியாக இருந்த சிறப்பும் பெற்றவர்.

இளம் வயதிலேயே பிரஜாத் சோஷியலிஸ்ட் பார்ட்டியில் இணைந்து தனது அரசியல் வாழ்வை துவங்கி, உத்தரப்பிரதேசத்தின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக வலம் வந்தார். #RIPSatyaPrakashMalviya
Tags:    

Similar News