search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் மத்திய மந்திரி"

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவர் கல்ராஜ் மிஷ்ரா பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடப்போவது இல்லை என்று தெரிவித்துள்ளார். #BJP #KalrajMishra
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர், பா.ஜனதா மூத்த தலைவர் கல்ராஜ் மிஷ்ரா. இவர் மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தவர் ஆவார்.

    இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தியோரியா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த தேர்தலில் அவர் போட்டியிடப்போவது இல்லை என்று அறிவித்துள்ளார்.

    இதுபற்றி அவர் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசினார். அப்போது அவர், “நான் அரியானா, மராட்டிய மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக இருக்கிறேன். இது தொடர்பான பணியில் தீவிரமாக உள்ளேன். எனவே பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப்போவது இல்லை என்று கட்சி மேலிடத்தில் கூறி விட்டேன்” என கூறினார்.

    ஏற்கனவே, கல்ராஜ் மிஷ்ராவுக்கு வயது 75-ஐ கடந்து விட்டது என்பதால், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாது என தகவல்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கொலை வழக்கில் பா.ஜ.க. பிரமுகர் முகுல் ராய் முன்ஜாமின் கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். #SatyajitBiswas #MukulRoy #Anticipatorybail
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ளது கிருஷ்ணகஞ்ச் சட்டசபை தொகுதி. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சத்யஜித் பிஸ்வாஸ். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

    இந்நிலையில், எம்.எல்.ஏ. சத்யஜித் பிஸ்வாஸ் வங்காளதேசம் நாட்டின் எல்லைப்பகுதியான நாடியா மாவட்டம், புல்வாரியில் உள்ள தனது வீட்டின் அருகில் 9-2-2019 அன்று நடந்த சரஸ்வதி பூஜையில்  பங்கேற்றார்.

    சத்யஜித் பிஸ்வாஸ்

    அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சத்யஜித் பிஸ்வாசை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியில் சத்யஜித் பிஸ்வாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,  சத்யஜித் பிஸ்வாஸ் கொல்லப்பட்ட வழக்கில் முன்னர் மம்தாவின் ஆதரவாளராக இருந்து கடந்த ஆண்டு பா.ஜ.க.வுக்கு தாவிய முன்னாள் எம்.பி. முகுல் ராய் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த கொலை வழக்கில் இவருடன் மேலும் மூன்றுபேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இவர்களில் இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர். விரைவில் முகுல் ராயும் கைது செய்யப்படலாம் என திரிணாமுல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், சத்யஜித் பிஸ்வாஸ் கொலை வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக முன்ஜாமின் கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் முகுல் ராய்  இன்று மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனுவின் மீது அடுத்த வாரம் விசாரணை நடைபெறவுள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவுடன் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் முகுல் ராய் சில மாதங்கள் ரெயில்வே துறை மந்திரியாக பதவி வகித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம். #SatyajitBiswas #MukulRoy #Anticipatorybail
    முன்னாள் மத்திய மந்திரி உபேந்திர குஷ்வாஹா ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைத்துக்கொண்டார். #UpendraKushwaha #NDA #Congress
    புதுடெல்லி:

    பீகாரை சேர்ந்த ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. இந்த கட்சியின் தலைவரான உபேந்திர குஷ்வாஹா மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை மந்திரியாகவும் பொறுப்பேற்றார்.

    கடந்த சில நாட்களாக பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து வந்த அவர், சமீபத்தில் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிய அவர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதன்படியே நேற்று அவர் தன்னை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைத்துக்கொண்டார்.

    டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ், சரத் யாதவ் உள்ளிட்டோர் இருந்தனர். ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்ததன் மூலம் பீகாரில் காங்கிரஸ் கூட்டணி பலம் பெற்றுள்ளது. அதேநேரம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.
    உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சத்ய பிரகாஷ் மால்வியா உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை மரணமடைந்தார். #RIPSatyaPrakashMalviya
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மால்வியாநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை பெட்ரோலிய துறை முன்னாள் மத்திய மந்திரி சத்ய பிரகாஷ் மால்வியா மரணமடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு வயது 84.

    காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், முன்னாள் பிரதமர் சந்திர சேகர் தலைமையிலான ஆட்சியில் பெட்ரோலியத்துறை மந்திரியாக இருந்தவர். மேலும், உத்தரப்பிரதேச மாநில சட்டசபையின் சுற்றுச்சூழல் துறை மந்திரியாக இருந்த சிறப்பும் பெற்றவர்.

    இளம் வயதிலேயே பிரஜாத் சோஷியலிஸ்ட் பார்ட்டியில் இணைந்து தனது அரசியல் வாழ்வை துவங்கி, உத்தரப்பிரதேசத்தின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக வலம் வந்தார். #RIPSatyaPrakashMalviya
    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீட்டில் நகை-பணம் திருடிய வேலைக்கார பெண்களை போலீசார் கைது செய்தனர். #PChidambaram #HouseRobbery
    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் வீடு சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் சாலை பகுதியில் உள்ளது. இங்கு ப.சிதம்பரம், குடும்பத்துடன் வசிக்கிறார். ப.சிதம்பரம் வீட்டில் திருட்டு போய்விட்டதாக, அவரது மேலாளர் முரளி ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.



    புகாரில், ப.சிதம்பரம் வீட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த சில தங்க நகைகள், ஒரு தங்கக்காசு, 6 பட்டு புடவைகள் மற்றும் ரூ.1½ லட்சம் ஆகியவை திருட்டு போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி மேற்பார்வையில், ஆயிரம்விளக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    விசாரணையில், ப.சிதம்பரம் வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கி வீட்டு வேலை பார்க்கும் பெண்கள் வெண்ணிலா, விஜி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. உடன்பிறந்த சகோதரிகளான இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    அப்போது நகைகள் மற்றும் பொருட்கள் திருடியதை வெண்ணிலா, விஜி ஆகியோர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. திருட்டு போன நகை மற்றும் பொருட்களை தியாகராயநகரில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது. அவற்றை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் மேலாளர் முரளி, தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். இதனால் இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படமாட்டாது என்று முதலில் போலீசார் கூறினார்கள்.

    இதற்கிடையே திருட்டுப்போன நகை மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டது. இதையடுத்து நேற்று திடீரென் நுங்கம்பாக்கம் போலீசார் வெண்ணிலா, விஜி ஆகியோரை விசாரணைக்கு அழைத்தனர். விசாரணைக்கு பிறகு நேற்று மாலை அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் அறிவித்தனர்.

    திருட்டுப்போன நகைகளும் மீட்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் திருடியதையும் ஒப்புக்கொண்டதால் இந்த வழக்கில் மேல்நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது என்று சட்டநிபுணர்கள் கூறியதால், இருவரும் கைது செய்யப்பட்டார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.   #PChidambaram #HouseRobbery  #Tamilnews
    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீட்டில் நகை-பணம் திருட்டு போய்விட்டது. இதுதொடர்பாக வீட்டில் வேலை பார்த்த 2 பெண்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீட்டில் நகை-பணம் திருட்டு போய்விட்டது. இதுதொடர்பாக வீட்டில் வேலை பார்த்த 2 பெண்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். ஆனால் போலீசில் கொடுத்த புகாரை திடீர் என வாபஸ் பெற்றுவிட்டனர்.

    முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் வீடு சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் சாலை பகுதியில் உள்ளது. இங்கு ப.சிதம்பரம், அவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் வசிக்கின்றனர். ப.சிதம்பரம் வீட்டில் திருட்டு போய்விட்டதாக, அவரது மேலாளர் முரளி நேற்று முன்தினம் ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரில், ப.சிதம்பரம் வீட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த சில தங்க நகைகள், ஒரு தங்கக்காசு, 6 பட்டு புடவைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கப்பணம் திருட்டு போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை துணியால் மூடி மறைத்துள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புகார் தொடர்பாக நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி மேற்பார்வையில் ஆயிரம்விளக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இந்த திருட்டு வழக்கில், ப.சிதம்பரம் வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கி வீட்டு வேலை பார்க்கும் பெண்கள் வெண்ணிலா, விஜி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. வெண்ணிலா, விஜி ஆகியோர் உடன்பிறந்த சகோதரி ஆவார்கள். அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், நகைகள் மற்றும் பொருட்கள் திருடிய குற்றத்தை வெண்ணிலா, விஜி ஆகியோர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. திருட்டு போன நகை மற்றும் பொருட்களை தியாகராயநகரில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது. அவற்றை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் நேற்று பிற்பகலில் ப.சிதம்பரத்தின் மேலாளர் முரளி தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். இதனால் இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட மாட்டாது என்றும், வழக்கு முடித்து வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். 
    நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் நீங்கள் பங்கேற்கக்கூடாது என்று பிரணாப் முகர்ஜிக்கு முன்னாள் மத்திய மந்திரி ஜாபர் ஷெரீப் கடிதம் எழுதி உள்ளார்.
    பெங்களூரு:

    ஆர்.எஸ்.எஸ். சார்பில் நாக்பூரில் ஜூன் 7-ந் தேதி நடக்கும் விழாவில் பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரணாப் முகர்ஜிக்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரும், முன்னாள் மத்திய ரெயில்வே மந்திரியுமான ஜாபர் ஷெரீப் கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    ஆர்.எஸ்.எஸ். விழாவில் நீங்கள் (பிரணாப் முகர்ஜி) கலந்து கொள்ள இருக்கும் செய்தி அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது. மத சார்பற்ற கொள்கையோடு பல ஆண்டுகள் அரசியலில் இருந்து நாட்டின் உயர்ந்த பதவியான குடியரசு தலைவர் பதவி வகித்த நீங்கள், பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ஆர்.எஸ்.எஸ். விழாவில் கலந்து கொள்வது சரியல்ல. நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் நீங்கள் பங்கேற்கக்கூடாது.

    இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

    கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் பரிசீலனையின்போது, ‘குடியரசு தலைவர் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை வேட்பாளராக அறிவிப்பதில் யாரும் தவறு காண முடியாது. அவரது நாட்டுப்பற்றை யாரும் சந்தேகிக்க முடியாது’ என்று பிரதமர் மோடிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜாபர் ஷெரீப் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.


    2019 பாராளுமன்ற தேர்தல்தான் ராகுல்காந்திக்கு முக்கிய பரீட்சையாக அமையும் என்று முன்னாள் மத்திய மந்திரி அஸ்வனிகுமார் கூறியுள்ளார். #KarnatakaElection2018 #RahulGandhi #Parliamentelection

    புதுடெல்லி:

    ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவரானதற்கு பிறகு முதல் முறையாக சந்தித்த கர்நாடக தேர்தலில் அந்த கட்சி ஆட்சியை இழந்துள்ளது.

    இந்தியாவில் காங்கிரஸ் வலுவாக உள்ள மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று. அங்கு எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என காங்கிரஸ் கருதியது.

    அதற்காக முன்கூட்டியே பல்வேறு திட்டங்களை உருவாக்கி தேர்தல் பணிகளை தீவிரமாக செய்தனர். இருந்தும் காங்கிரஸ் தோல்வியை சந்தித்து இருக்கிறது.

    ராகுல்காந்தி தனது முதல் பரீட்சையிலேயே தோல்வி அடைந்து இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அஸ்வனிகுமார் கூறும் போது, கர்நாடகா தேர்தல் முடிவு ராகுலுக்கு விடப்பட்ட சவாலாக கருத முடியாது.

    அதேநேரத்தில் 2019 பாராளுமன்ற தேர்தல்தான் ராகுல்காந்திக்கு முக்கிய பரீட்சையாக அமையும். அந்த தேர்தலில் மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைத்து வெற்றி பெற முயற்சி மேற்கொள்ளப்படும்.

    கர்நாடக தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு முடிவுகள் வரவில்லை என்று கூறினார்.

    மேலும் கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் தொண்டர்களை வாக்குசாவடி அடிப்படையில் முழுமையாக பணியாற்றுவதற்கு ஏற்பாடு செய்யாததும், கட்சிக்குள் இருந்த கோஷ்டி பூசல்களை சரிசெய்யாததும்தான் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்று கட்சிக்குள்ளேயே சிலர் குற்றம்சாட்டுகிறார்கள்.

    அதாவது வாக்காளர்களின் மனநிலையை புரிந்து கொண்டு அதற்கு தகுந்த மாதிரி உரிய பணிகளை காங்கிரஸ் கட்சி செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

    லிங்காயத் சமூக விவகாரத்தில் காங்கிரஸ் எடுத்த முடிவு சரியானது அல்ல என்று பலரும் விமர் சிக்கிறார்கள். விரைவில் மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கர்நாடக தோல்வி காங்கிரசை பாதித்துள்ளது.

    கர்நாடக தேர்தலில் ராகுல்காந்தி மிகவும் தீவிரமாக பிரசாரம் செய்தார். 9 முறை அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வி‌ஷயத்தில் முதல்-மந்திரி சித்தராமையாவை தன்னிச்சையாக செயல்பட அனுமதி அளித்தார்.ஆனால், அது உரிய பலனை தரவில்லை.

    இது சம்பந்தமாக மூத்த தலைவர் ஒருவர் கூறும் போது, எங்களுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. தேர்தலில் சில இடங்கள் குறையும். ஆனாலும், தனிப் பெரும் கட்சியாக காங்கிரஸ் வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், அது நடக்கவில்லை என்று கூறினார்.

    கர்நாடக தேர்தலில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடந்த ஒரு ஆண்டுகளாகவே தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வந்தனர். இதற்கான பணிகளை கட்சி மேலிட பொறுப்பாளர் வேணுகோபாலிடம் ராகுல்காந்தி ஒப்படைத்து இருந்தார்.

    ‘பூத்’ கமிட்டி அமைப்பது, வாக்காளர்களிடம் அரசின் நலத்திட்டங்களை பற்றி விளக்குவது போன்ற பணிகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால், அது எடுபடவில்லை. #KarnatakaElection2018 #RahulGandhi #Parliamentelection

    ×