செய்திகள்

டெல்லியில் இருந்து புறப்பட்டார் குடியரசுத்தலைவர் - ஐரோப்பிய நாடுகளுக்கு 8 நாள் அரசு முறை பயணம்

Published On 2018-09-02 06:01 GMT   |   Update On 2018-09-02 06:01 GMT
டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிப்ரஸ் பல்கேரியா மற்றும் செக் குடியரசு போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு 8 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். #PresidentRamNathKovind
புதுடெல்லி:

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் 8 நாள் அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு இன்று புறப்பட்டுச் சென்றார். தனது பயணத்தின் முதல் நாடாக 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை சிப்ரஸ் நாட்டுக்கு சென்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார்.

இதைத்தொடர்ந்து, செப்டம்பர் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை பகேரியா செல்லும் அவர், இந்த பயணத்தில் செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தன்று அந்நாட்டில் உள்ள சோபியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முன்னிலையில் உரையாற்ற உள்ளார்.

பயணத்தின் மூன்றாம் கட்டமாக 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை செக் குடியரசு நாட்டிற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பயணம் மேற்கொள்ள உள்ளார். #PresidentRamNathKovind
Tags:    

Similar News