செய்திகள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீதான தடையை நீக்கி ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு

Published On 2018-08-27 14:05 GMT   |   Update On 2018-08-27 14:05 GMT
ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கி, அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Jharkhand #PopularFrontofIndia
ராஞ்சி:

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது ஜார்கண்ட் மாநில அரசு தடை விதித்திருந்தது. இந்த அமைப்பின் முழு செயல்பாடுகளையும் முடக்கும் விதமாக இருந்த இந்த தடையை எதிர்த்து ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் அமைப்பின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த ஜார்கண்ட் உயர்நீதிமன்றம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ய முறையான வழிமுறைகளை மாநில அரசு பின்பற்றவில்லை என தெரிவித்ததுடன், அந்த அமைப்பின் மீதான தடையையும் விலக்கி உத்தரவிட்டுள்ளது. #Jharkhand #PopularFrontofIndia
Tags:    

Similar News