செய்திகள்

நிவாரண முகாமில் இருந்து வெளியேறியவர்கள் வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் செலுத்தப்படும் - பினராயி விஜயன்

Published On 2018-08-24 15:34 GMT   |   Update On 2018-08-24 15:34 GMT
கேரளாவில் அரசின் நிவாரண முகாம்களில் தங்கி வெளியேறிவர்களின் வங்கி கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #PinarayiVijayan
திருவனந்தபுரம்:  

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.

மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் இதுவரை 350க்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது.

இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில், கேரளா மாநிலத்தில் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகி அரசின் நிவாரண முகாம்களில் தங்கி வெளியேறிவர்களின் வங்கி கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளா மாநிலத்தின் வெள்ள பாதிப்புக்கு ஆளாகி அரசு சார்பில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் பொதுமக்கள் பலர் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

அரசின் நிவாரண முகாம்களில் தங்கி வெளியேறினவர்களின் வங்கி கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும். மேலும், நிவாரண முகாம்களில் தங்கி ஏற்கனவே வெளியேறினவர்களுக்கும் நிவாரண தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #PinarayiVijayan
Tags:    

Similar News