செய்திகள்

ரக்சா பந்தன் - உ.பி. அரசு பேருந்துகளில் பெண்களுக்கு 2 நாள் இலவச பயணம்

Published On 2018-08-24 14:06 GMT   |   Update On 2018-08-24 14:06 GMT
ரக்சா பந்தனை முன்னிட்டு உ.பி.யில் அரசு பேருந்துகளில் பெண்கள் இரண்டு நாள்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #RakshaBandhan
லக்னோ:

சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் பண்டிகை நாளை மறுநாள் (ஆகஸ்ட் 26) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுபவர்களின் கையில் ராக்கி கட்டி மகிழ்வார்கள். எனவே, அனைத்து சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கும் இது மிகவும் விசேஷமான நிகழ்வாக உள்ளது.



இந்நிலையில், ரக்சா பந்தனை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இயங்கும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, மாநில போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரக்சா பந்தனை முன்னிட்டு ஆகஸ்ட் 25 மற்றும் 26-ம் தேதிகளில் உ.பி. மாநில போக்குவரத்து கழகத்தின் ஏசி மற்றும் ஏசி அல்லாத அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்’ என தெரிவித்துள்ளது. #RakshaBandhan
Tags:    

Similar News