செய்திகள்

வெள்ளத்தால் நிலைகுலைந்து தவிக்கும் கேரளாவுக்கு ஒடிசா கூடுதலாக ரூ,5 கோடி நிதியுதவி

Published On 2018-08-19 15:30 GMT   |   Update On 2018-08-19 15:30 GMT
கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு ஒடிசா மாநில அரசு கூடுதலாக ரூ.5 கோடியும், மணிப்பூர் அரசு ரூ.2 கோடியும் நிதியுதவி அளித்துள்ளன. #KeralaRains #KeralaFloods
புவனேஷ்வர்:

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.

மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. நேற்று மட்டும் 33 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ளனர்.

இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

அவ்வகையில் கேரளா மாநில அரசின் துயர் துடைப்பு பணிகளுக்கு ஒடிசா மாநில அரசு கூடுதலாக ரூ.5 கோடி நிதியுதவி அளிக்கப்படும். சுமார் ரூ.8 கோடி மதிப்பிலான 500 மெட்ரிக் டன்கள் கொண்ட பாலிதீன் ஷீட்டை அங்கு அனுப்பி வைக்க உள்ளோம். ஒடிசாவில் இருந்து 244 தீயணைப்பு படைவீரர்கள், 65 மீட்பு படகுகளை அனுப்பியுள்ளோம். கேரளாவுக்கு தேவையான உதவிகளை செய்துதரும்படி நிவாரண குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளோம் என அம்மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இதேபோல், மணிப்பூர் மாநில முதல் மந்திரி பிரேன் சிங் ரூ.2 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். #KeralaRains #KeralaFloods 
Tags:    

Similar News