செய்திகள்

அமர்நாத் யாத்திரை - புனித பயணத்தை துவக்கிய 223 யாத்ரீகர்கள்

Published On 2018-08-12 06:38 GMT   |   Update On 2018-08-12 06:38 GMT
அமர்நாத் குகைக்கோயிலில் தோன்றியுள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக இன்று 223 யாத்ரீகர்கள் ஜம்முவில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். #Amarnathyatra
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். ஜூன் மாதம் 28-ம் தேதி துவங்கிய இந்த யாத்திரை ஆகஸ்ட் 26-ம் தேதி வரை நடைபெறும்.

யாத்திரை துவங்கிய முதல் நாளில் 2 ஆயிரத்து 280 யாத்ரீகர்கள் மலையடிவாரத்தில் இருந்து அமர்நாத் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றனர். பாகல்காம் மற்றும் பல்தல் அடிவார முகாம்களில் இருந்து இந்த யாத்திரை தொடங்கும்.

இந்நிலையில், இன்று 223 யாத்ரீகர்கள் தங்கள் புனிதப்பயணத்தை துவங்கியுள்ளனர். 11 வாகனங்களில் தங்களது பயணத்தை துவக்கிய யாத்ரீகர்கள் இன்று மாலைக்குள் பல்தல் மற்றும் பாகல்காம் அடிவார முகாம்களை சென்றடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அமர்நாத் யாத்திரைக்கான முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது. இந்த யாத்திரையின் மூலம் இதுவரை 2 லட்சத்து 78 ஆயிரத்து 72 பேர் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். #Amarnathyatra
Tags:    

Similar News