செய்திகள்

‘பாகிஸ்தானில் ஜனநாயகம் ஆழமான வேர் விடட்டும்’ - இம்ரான்கானுக்கு மோடி வாழ்த்து

Published On 2018-07-30 16:42 GMT   |   Update On 2018-07-30 17:37 GMT
பாகிஸ்தான் தேர்தலில் அதிக இடங்களில் வென்று அடுத்து ஆட்சியமைக்க உள்ள இம்ரான்கானுக்கு பிரதமர் மோடி போன் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். #PMModi #ImranKhan
புதுடெல்லி:

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இம்ரான்கானின் பிடிஐ கட்சி அதிக இடங்களில் வென்றது. பெரும்பான்மை இல்லை என்றாலும் சிறிய கட்சிகள் உதவியுடன் இம்ரான்கான் ஆட்சியமைக்க உள்ளார். வரும் 11-ம் தேதி அவர் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், இம்ரான்கானிடம் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேர்தல் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அப்போது, பாகிஸ்தானில் ஜனநாயகத்தின் வேர்கள் ஆழமான வேர் விடட்டும் என மோடி கூறியுள்ளார். 

காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளை பேசி தீர்க்க தயாராக இருப்பதாக இம்ரான்கான் முன்னர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News