செய்திகள்

அமெரிக்காவில் இருந்து வந்த விமானத்தில் மூட்டை பூச்சி தொல்லை - ஏர் இந்தியா விளக்கம்

Published On 2018-07-24 15:21 GMT   |   Update On 2018-07-24 15:21 GMT
அமெரிக்காவில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் மூட்டை பூச்சி தொல்லை இருப்பதாக எழுந்த புகாருக்கு அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. #AirIndia
புதுடெல்லி:

ஏர் இந்தியா விமானம் மூலம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து இந்தியாவுக்கு டோன் சேகர் என்ற பயணி கடந்த 17-ம் தேதி வந்துள்ளார். இந்த பயணத்தின் போது மூட்டை பூச்சிகளின் தொல்லையால் மிகவும் அவதிப்பட்டதாகவும், தனது மனைவியும் குழந்தையும் கூட பாதிக்கப்பட்டதாகவும் விமான போக்குவரத்து விவகாரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டார்.

இதே போல், ஜூலை 20-ம் தேதி நியூ ஆர்க்கில் இருந்து இந்தியாவுக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணியும் மூட்டை பூச்சிகளால் கடிபட்ட தனது அனுபவத்தை ட்விட்டரில் பதிவிட்டார்.



இந்நிலையில், இந்த ட்வீட்டுகளுக்கு பதிலளித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், இதுபோன்ற சம்பவம் எதிர்பாராதவிதமாக எப்போதாவது நடக்கும் நிகழ்வு ஆகும். இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக விசாரித்து விரைவில் சரிசெய்யப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும், அனுபவமிக்க நிபுணர்களை கொண்டு பயணிகளின் விருப்பத்துக்கு ஏற்றவாறு இருக்கைகள் உள்ளிட்டவை மாற்றி அமைக்கப்படும் எனவும் தனது அறிக்கையில் ஏர் இந்தியா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. #AirIndia
Tags:    

Similar News