செய்திகள்
மணிப்பூரில் திடீர் நிலச்சரிவு- 9 பேர் மண்ணில் புதைந்து உயிரிழப்பு
மணிப்பூரின் தாமங்லாங் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர்.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம் முதல் மழை பெய்து வருகிறது. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவினால் சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, பேரழிவு ஏற்பட்டுள்ளது.
இடிபாடுகளில் சிக்கி 9 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர்.
கனமழை காரணமாக மாநிலத்தில் உள்ள முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் மேலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதால், ஆறுகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி ஓடும் என்றும், இதன் காரணமாக கரையோர பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது. #ManipurLandslide
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம் முதல் மழை பெய்து வருகிறது. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவினால் சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, பேரழிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தாமங்லாங் மாவட்டம் நியூ சேலம் கிராமத்தில் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த மலையடிவாரத்தில் இருந்த வீடுகள் மீது மண் சரிந்து விழுந்தது. மலை உச்சியில் இருந்த சில வீடுகள் இடிந்து விழுந்தன.
கனமழை காரணமாக மாநிலத்தில் உள்ள முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் மேலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதால், ஆறுகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி ஓடும் என்றும், இதன் காரணமாக கரையோர பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது. #ManipurLandslide