செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் - 3 ராணுவ வீரர்கள் படுகாயம்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். #MilitantsAttacked
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ராணுவ வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் இன்று கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #MilitantsAttacked