செய்திகள்
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ல் தொடங்குகிறது
பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் அடுத்தமாதம் ஜூலை 18 முதல் தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 18 நாட்கள் நடக்க இருக்கிறது. #Monsoonsession #Parliment
புதுடெல்லி:
பாராளுமன்ற விவகாரங்களுக்கான கேபினட் கூட்டம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடந்தது. அப்போது, மழைக்கால கூட்டத்தொடரை அடுத்தமாதம் ஜூலை 18 முதல் தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 18 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி மாளிகை முறைப்படி விரைவில் அறிவிக்கும். இந்த மழைக்கால கூட்டத்தொடரில்
முத்தலாக் மற்றும் ஓ.பி.சி ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து அளிக்கும் மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது.