search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்தலாக் மசோதா"

    பாராளுமன்றம் மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவை எதிர்த்து வாக்களிப்போம் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். #TripleTalaq #Kanimozhi
    திமுக எம்பி கனிமொழி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முத்தலாக் சட்டத்தின் மூலம் சிறைத்தண்டனை விதிப்பதை திமுக தொடர்ந்து எதிர்த்துக்கொண்டே வருகிறது. சிவில் சட்டத்தை கிரிமினலாக கொண்டு வருவதை திமுக நிச்சயம் ஏற்றுக் கொள்ளவில்லை.

    பாராளுமன்றம் மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவை எதிர்த்து நாங்கள் வாக்களிப்போம். இதை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு

    பெண்கள் மீது இவ்வளவு அக்கறை கொண்ட பா.ஜனதா 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான பெண்கள் மசோதாவை ஏன் கொண்டு வரவில்லை. அது அவர்களின் தேர்தல் அறிக்கையிலேயே இருக்கிறது.

    பாராளுமன்றத்தில் பெண்கள் அதிக அளவில் இல்லை. அதில் முனைப்பு காட்டாமல் இஸ்லாமிய பெண்கள் மீது மட்டும் அக்கறை காட்ட துடிப்பது ஏன்? நிச்சயமாக இது மக்களை பிரித்தாளக் கூடிய ஒரு எண்ணம்.

    இதுவரைக்கும் இருந்த பிரதமர்கள் பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது அவர்கள் பதில் அளிக்கும் நேரத்தில் அவைக்கு வந்து பதில் அளித்துள்ளார்கள். ஆனால் பாராளுமன்ற கூட்டம் தொடர் நடக்கும்போதே வெளிநாட்டுக்கு பயணம் செய்த பிரதமர் மோடிதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நீண்ட நேர விவாதத்திற்குப் பிறகு மக்களைவயில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ், அதிமுக வெளிநடப்பு செய்தது. #TripleTalaq
    முஸ்லிம் மதத்தினரிடையே மனைவியை கணவர் திடீரென்று விவாகரத்து செய்யும் முத்தலாக் முறையை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் முத்தலாக் சட்ட மசோதாவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் அங்கு முடங்கிவிட்டது. எனவே, அவசர சட்டம் மூலம் இந்த மசோதாவுக்கு உயிரூட்டும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது. இதற்காக சில திருத்தங்கள் செய்யப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுடன் கடந்த 19-9-2018 அன்று அவசர சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால், ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட எந்தவொரு அவசர சட்டமும் ஆறுமாத காலத்துக்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற்று சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும்.

    எனவே, தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத் தொடரில் முத்தலாக் சட்ட மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக மக்களவையில் கடந்த வாரம் திங்கட்கிழமை முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதா விவாதம் இன்று நடைபெற்றது.

    விவாதத்தின்போது பெரும்பாலான கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்தது. மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பல்வேறு திருத்தங்களை கொண்டு வர வற்புறுத்தின. ஆனால் மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்தது.

    இதனால் விவாதம் முடிந்தவுடன் சபாநாயகர் குரல் வாக்கெடுப்பு நடத்துவதற்கான நடைமுறைகளை மேற்கொண்டார். வாக்கெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தது.

    குரல் வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவாக 245 பேர் வாக்களித்தனர். 11 பேர் எதிர்த்து வாக்களித்தனர். இதனால் மசோதா நிறைவேற்றப்பட்டது.
    பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் அடுத்தமாதம் ஜூலை 18 முதல் தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 18 நாட்கள் நடக்க இருக்கிறது. #Monsoonsession #Parliment
    புதுடெல்லி:

    பாராளுமன்ற விவகாரங்களுக்கான கேபினட் கூட்டம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடந்தது. அப்போது, மழைக்கால கூட்டத்தொடரை அடுத்தமாதம் ஜூலை 18 முதல் தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 18 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி மாளிகை முறைப்படி விரைவில் அறிவிக்கும். இந்த மழைக்கால கூட்டத்தொடரில் 
    முத்தலாக் மற்றும் ஓ.பி.சி ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து அளிக்கும் மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
    ×