செய்திகள்

மும்பையில் கனமழை - மரம் விழுந்ததில் இருவர் பலி

Published On 2018-06-25 06:22 GMT   |   Update On 2018-06-25 06:22 GMT
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று மாலை பெய்த மழையால் மரம் முறிந்து விழுந்ததில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #Mumbairain
மும்பை:

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தெருக்களிலும், சாலை ஓரங்களிலும் சூழ்ந்த வெள்ளநீர் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை தொடரும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக தெற்கு மும்பையில் எம்.ஜி சாலை அருகே உள்ள மெட்ரோ சினிமாஸ் பகுதியில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்தது. மரம் முறிந்து விழுந்ததில் மரத்தின் அருகே இருந்த 6 பேர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள ஜி.கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் பார்சிங் மற்றும் ராஜேந்திர சிங் ஆகியோர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், தலையில் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் 2 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. #Mumbairain
Tags:    

Similar News