செய்திகள்

சத்தீஸ்கரில் கரடி தாக்கி விவசாயி பலி

Published On 2018-06-23 12:43 GMT   |   Update On 2018-06-23 12:43 GMT
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் பகுதியில் கரடி தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். #Bearattack
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள கர்சியா வனச்சரகம் அருகே இன்று காலை தனது நிலத்தில் விவசாயம் செய்வதற்காக இந்தல் சிங் ரதியா (50) என்ற விவசாயி சென்றுள்ளார்.

அப்போது அங்கு தனது குட்டிகளுடன் வந்த பெண் கரடி அவரை தாக்கியதில் ரதியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த வனத்துரையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக, விவசாயினுடைய உறவினர்களுக்கு சுமார் 25 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். #Bearattack
Tags:    

Similar News