செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். #militantstkilled
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்திற்கு உட்பட்ட ஹந்த்வாரா பகுதியில் நேற்று இரவு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள காசியாபாத் வனப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது சில பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக பயங்கரவாதிகள் அப்பகுதியில் இருந்து தப்பியோடினர். அதைத்தொடர்ந்து தப்பியோடியவர்களை பிடிப்பதற்காக அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தப்பியோடிய பயங்கரவாதிகள் 2 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். மேலும், மீதமுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #militantstkilled
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்திற்கு உட்பட்ட ஹந்த்வாரா பகுதியில் நேற்று இரவு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள காசியாபாத் வனப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது சில பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக பயங்கரவாதிகள் அப்பகுதியில் இருந்து தப்பியோடினர். அதைத்தொடர்ந்து தப்பியோடியவர்களை பிடிப்பதற்காக அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தப்பியோடிய பயங்கரவாதிகள் 2 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். மேலும், மீதமுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #militantstkilled