செய்திகள்

ஆந்திராவில் சரக்கு லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் பலி

Published On 2018-05-20 06:54 GMT   |   Update On 2018-05-20 06:54 GMT
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சரக்கு லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமராவதி:

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்திலிருந்து இன்று சிலர் காரில் சென்றுகொண்டிருந்தனர். மாமண்டூர் என்ற இடத்தின் அருகே கார் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த சரக்கு லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். #Fivekilled
Tags:    

Similar News