செய்திகள்

என்னை கொல்ல அரசியல் கட்சி சதிதிட்டம்- மம்தா பானர்ஜி பரபரப்பு பேட்டி

Published On 2018-05-11 17:37 GMT   |   Update On 2018-05-11 17:37 GMT
என்னை கொல்வதற்கு அரசியல் கட்சி சதிதிட்டம் தீட்டி உள்ளது என்று மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி செய்தி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பெங்காலி செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

முதலில் ஒருவருடைய கேரக்டரை படுகொலை செய்து, பின்னர் அவரை தீர்க்க வேண்டும் என்ற முறையில் சதி நடக்கிறது. நான் மரணத்திற்கு பயப்படுபவள் கிடையாது. என்னை கொலை செய்ய ஏற்கனவே திட்டமிடப்பட்டது.

அரசியல் கட்சி என்னை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டிஉள்ளது என்பது எனக்கு தெரியும். என்னை கொலை செய்யும் பணி கொடுக்கப்பட்டு உள்ள நபர்கள் என்னுடைய வீடு, அலுவலகம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளை எல்லாம் உளவு பார்த்துவிட்டார்கள்.

பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் மற்றும் உளவுத்துறை, வீட்டை மாற்றுமாறு எனக்கு அறிவுரையை வழங்கினர்.

என்னுடைய மக்களை நான் விரும்புகிறேன் என்றும் அவர்களின் வளர்ச்சிக்காக பணியாற்றுவேன். என்னை யாரும் மிரட்டவும் முடியாது. மக்களுக்கான என்னுடைய பணியை தடுக்கவும் முடியாது என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

ஏற்கனவே அரசியலில் எதையும் எதிர்க்கொள்ள தயாராகிவிட்டேன் என கூறிஉள்ளார் மம்தா பானர்ஜி.
Tags:    

Similar News