செய்திகள்

கள்ளக்காதலனுடன் காரில் பிணமாக கிடந்த இளம்பெண் - ஜெய்ப்பூரில் பரபரப்பு

Published On 2018-05-05 15:59 GMT   |   Update On 2018-05-05 15:59 GMT
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இளம்பெண் ஒருவர் கள்ளக்காதலனுடன் காரில் பிணமாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் - டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை ஒரு கார் அனாதையாக நின்று கொண்டிருந்தது.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு விரைந்து வந்தனர். கார் கதவை திறந்து பார்த்ததில் உள்ளே ஒரு இளம்பெண்ணும், ஆணும் இறந்து கிடப்பதை கண்டனர்.

இதையடுத்து, அவர்கள் இருவரின் உடல்களை மீட்ட போலீசார் அவற்றை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் அவர்களது உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.

விசாரணையில், அந்த பெண்ணும், அவரது கள்ளக்காதலனும் இரவு முழுவதும் காரில் தனிமையில் இருந்ததும், அதன்பின் விஷம் அருந்தி தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் ஒருவர் கள்ளக்காதலனுடன் காரில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Tamilnews
Tags:    

Similar News