செய்திகள்

கேரளாவில் அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி - விசாரணைக்கு உத்தரவு

Published On 2018-04-03 15:55 GMT   |   Update On 2018-04-03 15:55 GMT
கேரளாவில் துணை கலெக்டர் உதவியுடன் அரசு நிலத்தை தனியாருக்கு விற்க முயன்றதாக சி.பி.ஐ கட்சி பிரமுகர் மீது புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் துணை கலெக்டர் உதவியுடன் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் விஜயன் செருக்கரா அரசு நிலத்தை தனியாருக்கு விற்க பேரம் பேசியதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியானது. இது தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர் சதீசன் இன்று சட்டசபையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், “இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க மாநில லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், யார் தவறு செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார். #TamilNews
Tags:    

Similar News