செய்திகள்
ஜம்மு காஷ்மீர்- சோபியான் பகுதியில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீரின் சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள டிரகாட் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்று காலை அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.
அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புப் படையினர் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
ஏற்கனவே, இன்று அதிகாலை அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள டிரகாட் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்று காலை அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.
அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புப் படையினர் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
ஏற்கனவே, இன்று அதிகாலை அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Tamilnews