செய்திகள்

ஆ.ராசா, கனிமொழி விடுதலையை எதிர்த்து சி.பி.ஐ. மேல்முறையீடு- டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணை

Published On 2018-03-21 01:56 GMT   |   Update On 2018-03-21 01:56 GMT
2 ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்து சி.பி.ஐ மேல்முறையீடு செய்துள்ளது. இது குறித்து டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடத்தப்படுகிறது.#2GVerdict
புதுடெல்லி:

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவை தொடர்ந்த வழக்குகளில், முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 19 பேரை விடுதலை செய்து கடந்த டிசம்பர் 21-ந்தேதி சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை சார்பில் நேற்றுமுன்தினம் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, சி.பி.ஐ. சார்பில் நேற்று டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இதை தெரிவித்தார். இந்த மனு, இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். #tamilnews
Tags:    

Similar News