செய்திகள்

தெலுங்கானாவில் சோகம் - எரியில் மூழ்கி சிறுவர்கள் உள்பட 5 பேர் பலி

Published On 2018-03-18 09:55 GMT   |   Update On 2018-03-18 09:55 GMT
தெலுங்கானாவில் குளிக்க சென்றபோது ஏரியில் மூழ்கி சிறுவர்கள் உள்பட 5 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ளது கன்னரம் கிராமம். அங்கு அமைந்துள்ள ஏரியில் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் உள்பட பலர் இன்று காலை குளிக்க சென்றனர்.

நீச்சலடித்து குளித்துக் கொண்டிருந்தபோது அவர்களில் இஷாக், மஹ்மூது அலி, ஹபிஸ், யுசுப், அகமது அலி என 5 பேர் திடீரென  மூழ்கி உயிரிழந்தனர். அதில் மூன்று சிறுவர்களும் அடங்குவர். 

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். ஏரியில் மூழ்கி இறந்தவர்கள் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Tags:    

Similar News