செய்திகள்
காஷ்மீர் அனந்தநாக் பகுதியில் என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியில் நேற்றிரவு பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Anantnag
ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள ஹகுரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் ராணுவத்தினர் மற்றும் சி.ஆர்.பி.எப் படையினர் இணைந்து நேற்றிரவு தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, பயங்கரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், வீரர்கள் பதிலடி கொடுத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Anantnag #TamilNews