செய்திகள்

பீகாரில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலி

Published On 2018-02-19 19:16 GMT   |   Update On 2018-02-19 19:16 GMT
பீகார் மாநிலத்தின் கந்தப் பகுதியில் திருமண வீட்டினர் சென்றுகொண்டிருந்த பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Bihar #roadaccident
பாட்னா:

பீகார் மாநிலத்தின் கந்தப் பகுதியில் திருமண வீட்டினர் சென்றுகொண்டிருந்த பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பீகார் மாநிலத்தின் கந்தப் பகுதியில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 40 பேர் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் 23 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் நாலந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் பாட்னா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் விபத்துக்குள்ளான பேருந்துக்கு தீவைத்தனர். #Bihar #roadaccident #tamilnews
Tags:    

Similar News