search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bihar"

    • பணியில் ஈடுபட்டிருந்த ஏராளமான தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
    • 30 தொழிலாளர்கள் வரை இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    பாட்னா:

    பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் மரிச்சா பகுதியில் கோசி ஆற்றின் மீது பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    இந்நிலையில் கட்டுமானப்பணியின் போது திடீரென பாலத்தின் பலகை இடிந்து பாலம் உடைந்து விழுந்துள்ளது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த ஏராளமான தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதனால் தொழிலாளர்கள் அலறி துடித்தனர்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததோடு மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள், தன்னாவலர்கள் உதவியோடு மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் ஒரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். 30 தொழிலாளர்கள் வரை இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


    • பீகாரில் ஆட்சி செய்யும் ஜனதா தளம் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ₹24.4 கோடியை பெற்றுள்ளது.
    • பாரதி ஏர்டெல் நிறுவும் ₹1 கோடியும், ஸ்ரீ சிமென்ட் நிறுவனம் ₹2 கோடியும் நன்கொடை கொடுத்துள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

    அதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக தேர்தல் நிதியாக ரூ.6,986 கோடி பெற்றுள்ளது. அதிகபட்சமாக 2019- 20ம் ஆண்டில் மட்டும் பாஜகவிற்கு ரூ.2,555 கோடி தேர்தல் நிதியாக வந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நிதியில் கிட்டத்தட்ட 50% பாஜகவுக்கே சென்றுள்ளது.

    பீகாரில் ஆட்சி செய்யும் ஜனதா தளம் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ₹24.4 கோடியை பெற்றுள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவும் ₹1 கோடியும், ஸ்ரீ சிமெண்ட் நிறுவனம் ₹2 கோடியும் நன்கொடை கொடுத்துள்ளது.

    இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை குறித்து தேர்தல் ஆணையத்திடம் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் கட்சி வித்தியாசமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

    2019 ஆம் ஆண்டில் எங்கள் அலுவலகத்துக்கு திடீரென வந்த சிலர் சீலிடப்பட்ட கவரை வைத்துவிட்டு சென்றனர். அதனை திறந்துபார்த்தபோது அதில் 10 கோடி மதிப்பிலான 10 தேர்தல் பத்திரங்கள் இருந்தன. அதனால் யார் எங்களுக்கு நன்கொடை கொடுத்தார்கள் என்ற தகவல் தெரியவில்லை என்று ஜனதா தள கட்சி தெரிவித்துள்ளது.

    அதே போல் சமாஜ்வாதி கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் 10.84 கோடி ரூபாய் பெற்றுள்ளது. ஆனால் அதில், 10 கோடி மதிப்பிலான 10 தேர்தல் பாத்திரங்கள் எங்களுக்கு தபால் மூலமாக வந்தது. ஆதலால் நன்கொடை கொடுத்தவர்களின் விவரங்கள் தெரியவில்லை என சமாஜ்வாதி கட்சி தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.

    • மக்களவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.

    குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், மேற்கு வங்க மாநில டிஜிபி ராஜீவ் குமாரை இடமாற்றம் செய்யும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கூடுதலாக, மிசோரம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பொது நிர்வாகத் துறையின் செயலாளர்களும் தங்கள் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் ஏற்கனவே 3 ஆண்டுகள் பணிபுரிந்த மாவட்டங்கள் மற்றும் சொந்த மாவட்டங்களில் இருந்து இடமாற்றம் செய்ய அனைத்து மாநில அரசுகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    மக்களவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

    • நிதிஷ்குமார், 2024 மக்களை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க இந்தியா கூட்டணியை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டார்
    • இந்தியா கூட்டணி உருவாகி தொகுதி பங்கீடு நடைபெறும் நேரத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்தார்

    கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. மறைந்த ராம் விலாஸ் பஸ்வான் கட்சியும் கூட்டணியில் அங்கம் வகித்தது.

    மக்களவை தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் நிதிஷ்குமாருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பாஜக கூட்டணியில் இருந்து விலகி, லாலு கட்சியுடன் இணைந்து முதல்வரானார்.

    பாஜகவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்த நிதிஷ்குமார், 2024 மக்களை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க இந்தியா கூட்டணியை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டார். இந்தியா கூட்டணி உருவாகி தொகுதி பங்கீடு நடைபெறும் நேரத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்தார். மோடி முன்னிலையில் இனிமேல் ஒருபோதும் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன் எனத் தெரிவித்தார்.

    இந்நிலையில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் காலித் அன்வர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "13 கோடி பீகார் மக்களும், பீகாரிகள் என்பதால் எங்கள் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச்சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) போன்ற எதுவும் தேவைப்படாது என நிதிஷ்குமார் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார்" என்று தெரிவித்தார்.

    பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் பீகாரில் குடியுரிமை திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அண்மையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 2019-ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

    2014 டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. அதன் காரணமாக இந்த சட்டம் அப்போது அமலுக்கு வரவில்லை.

    • பீகாரில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிந்தது.
    • விடைத்தாள் திருத்தும் பணி தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் 15-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி 23-ம் தேதி முடிவடைந்தது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தபின் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

    இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரது விடைத்தாள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதுதொடர்பாக, அந்த மாணவி தனது விடைத்தாளில், விவசாயியான எனது அப்பாவுக்கு வருமானம் குறைவு. எனவே நிதி நெருக்கடியால் படிப்பை கைவிடும்படி கூறிவருகிறார். தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் திருமணம் செய்துவைப்பதாக கூறியுள்ளார். தயவுசெய்து எனக்கு நல்ல மதிப்பெண் தந்து எதிர்காலத்தை காப்பாற்ற உதவுங்கள் என தெரிவித்துள்ளார்.

    மாணவியின் இந்த கோரிக்கை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது
    • பீகார் அரசியலின் 'நரம்பு மையம்' நாட்டில்மாற்றம் வரும்போது எல்லாம் இங்கு இருந்துதான் தொடங்குகிறது

    பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இன்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் (ஆர்ஜேடி) சார்பில் 'ஜன்விஸ்வாஸ்' பேரணி நடந்தது.இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார்.

    இந்த பேரணியில் ஆர்ஜேடி தலைவர் லாலுபிரசாத்யாதவ்,தேஜஸ்வி யாதவ்காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ், சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா, சிபிஐஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பங்கேற்றனர்.இந்த பேரணியில் சுமார் 10 லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    பேரணியின் போது ராகுல்காந்தி எம்.பி. பேசியதாவது:-

    பீகார் அரசியலின் 'நரம்பு மையம்'. நாட்டில் மாற்றம் வரும் போது எல்லாம் அது பீகாரில் இருந்துதான் தொடங்குகிறது. இதன் பிறகு இந்த மாற்றம் மற்ற மாநிலங்களை நோக்கி நகர்கிறது. இன்று நாட்டில் சித்தாந்தங்கள் மீது சண்டை நடக்கிறது. வெறுப்பும், வன்முறையும், ஆணவமும் இருக்கிறது. மறுபுறம், ஒருவருக்கொருவர் அன்பு, சகோதரத்துவம் மற்றும் மரியாதை உள்ளது.

    பாஜக, ஆர்எஸ்எஸ் நாட்டில் வெறுப்புணர்வை பரப்புகிறது.. மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதால் நாட்டில் வெறுப்பு அதிகமாக உள்ளது. நாட்டின் இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.

    மத்தியஅரசு ஒருசில 10 தொழிலதிபர்களுக்காக மட்டுமே செயல்படுகிறது.கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் சில தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி மதிப்பிலான கடனை மோடி அரசு தள்ளுபடி செய்து உள்ளது. ஆனால், மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி அரசு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.
    • நிதிஷ் குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் முதல்வர் நிதிஷ் குமாருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று 21,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    அப்போது பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று நம்புவதாக தெரிவித்தார்.மேலும் இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என்று பிரதமருக்கு உறுதியளிக்கிறேன் என்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.

    நிதிஷ் குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பீகாரின் முதலமைச்சராக பதவி வகிக்கும் நிதிஷ் குமார் கடந்த பிப்ரவரியில், ராஷ்டீரிய ஜனதாதள கட்சி தலைமையிலான மகா கூட்டணியில் இருந்து விலகி, பின்னர் பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சரானார். கடந்த 10 ஆண்டுகளில் 7 முறை அவர் கூட்டணி மாறியுள்ளார் என்பது குறியப்படத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ₹35 காணாமல் போனதால், 122 மாணவர்களை அருகில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று சத்தியம் செய்ய வைத்த ஆசிரியர் நீட்டூ குமாரி பணியிடமாற்றம்
    • சத்தியம் செய்தும் ஆசிரியருக்கு பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பீகார் மாநிலம் பன்கா மாவட்டத்தில் தனது பையிலிருந்த ₹35 காணாமல் போனதால், 122 மாணவர்களை அருகில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று சத்தியம் செய்ய வைத்த ஆசிரியர் நீட்டூ குமாரி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    ஆசிரியரின் இச்செயலை பொறுத்துக்கொள்ளாத மாணவர்களின் பெற்றோர் புகாரளித்த நிலையில் அம்மாநில பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    கடந்த புதன்கிழமை (பிப் 21) பள்ளிக்கு வந்த ஆசிரியர் நீட்டூ குமாரி, தனது பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை கொண்டு வரச் சொல்லி ஒரு மாணவருக்கு சொல்லியுள்ளார். பின்னர் அவர் தனது பையிலிருந்த 35 ரூபாய் காணாமல் போனதை கண்டுபிடித்துள்ளார்.

    பின்னர் ஒவ்வொரு மாணவர்களிடமும் அவர் பணம் காணாமல் போனதை பற்றி விசாரித்துள்ளார். அதில் மாணவர்கள் சொன்ன பதிலால் திருப்தியடையாத ஆசிரியர், மாணவர்களை பக்கத்தில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று பணம் திருடவில்லை என்று சத்தியம் செய்ய வைத்துள்ளார். சத்தியம் செய்தும் ஆசிரியருக்கு பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய விரும்புகிறேன்.
    • லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    லக்கிசராய்-சிகந்திரா பிரதான சாலையில் உள்ள பிஹராவுரா கிராமத்தில், இன்று அதிகாலை 3 மணியளவில் லாரியும் டெம்போவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில், திருமண விழாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த குறைந்தது ஒன்பது பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.

    உயிரிழந்தவர்களில் வீர் பாஸ்வான், விகாஸ் குமார், விஜய் குமார், திபானா பாஸ்வான், அமித் குமார், மோனு குமார், கிசான் குமார் மற்றும் மனோஜ் கோஸ்வாமி என கண்டறியப்பட்டுள்ளது.

    லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பீகார் மாநிலம் லக்கிசராய் பகுதியில் நடந்த சாலை விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துடன், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய விரும்புகிறேன்.

    மாநில அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ், உள்ளூர் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் ஈடுபட்டுள்ளது.

    இவ்வாறு கூறினார்.

    • ஜார்க்கண்டிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமென முதலமைச்சர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.
    • "மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதிக பங்கு கிடைக்க ஜாா்க்கண்ட் தயாராகிறது"

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.

    பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, ஜார்கண்டிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பல கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தது.

    இந்நிலையில், பீகார் மற்றும் ஆந்திராவிற்கு அடுத்தபடியாக ஜார்க்கண்டிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமென முதலமைச்சர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் சம்பாய் சோரன், "மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதிக பங்கு கிடைக்க ஜாா்க்கண்ட் தயாராகிறது" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான வரைவு அறிக்கையை விரைந்து தயாரித்து மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைக்குமாறு பணியாளர் துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி, அம்மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாநில மக்கள்தொகையில் 63 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர் என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

    • மிசா பார்தியும் அமலாக்கத்துறை அலுவலகம் வந்தார்.
    • ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு.

    ரயில்வே துறையில் பணி வழங்க நிலத்தை பெற்ற வழக்கில் முன்னாள் ரயில்வே துறை மந்திரியும், பீகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று காலை ஆஜர் ஆனார். லாலு பிரசாத் யாதவ் மூத்த மகளும், எம்.பி.-யுமான மிசா பார்தியும் அமலாக்கத்துறை அலுவலகம் வந்தார்.

    சுமார் பத்து மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், லாலு பிரசாத் யாதவ் பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து கிளம்பி சென்றார். முன்னதாக லாலு பிரசாத் யாதவ் விசாரணைக்கு ஆஜர் ஆவதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் அலுவலகத்தின் வெளியே திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    முன்னதாக, பீகார் மாநில முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், நேற்று மாலை பா.ஜ.க. ஆதரவுடன் மீண்டும் முதல் மந்திரியாக பதவியேற்றார். அரசியல் மாற்றம் ஏற்பட்ட நிலையில், லாலு பிரசாத் யாதவ் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ஆஜரானார்.
    • ஏராளமான ராஷ்டிரிய ஜனதா தள ஆதரவாளர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு.

    ரயில்வே துறையில் பணி வழங்க நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் முன்னாள் ரயில்வே துறை அமைச்சரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ஆஜரானார். அவருடன், மூத்த மகளும் ராஜ்யசபா எம்பி-யுமான மிசா பார்தியும் அமலாக்கத்துறை அலுவலகம் வந்தார்.

    லாலு பிரசாத்-ன் விசாரணைக்கு முன்னதாக ஏராளமான ராஷ்டிரிய ஜனதா தள ஆதரவாளர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மிசா பார்தி, "அமலாக்கத் துறை விசாரணைக்கு நாங்கள் வருவது புதிதல்ல. பாஜக-வின் பின்னால் இல்லாதவர்களுக்கெல்லாம் சம்மன் வழங்கப்பட்டு வருகிறது. விசாரணை அமைப்புகள் எப்போதெல்லாம் எங்களை அழைக்கிறார்களோ அப்போதெல்லாம் நாங்கள் ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறோம். அனைத்தும் மக்கள் முன்பாகவே நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

    ×